Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *04/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாற்பது சம்ஸ்காரங்கள் பார்த்துக்கொண்டு வரக்கூடிய வரிசையில் கர்ப்பாதானம் ஆரம்பித்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான முகூர்த்தத்தை மேலும் தொடர்கிறார்.*


    *இந்த சம்ஸ்காரம் செய்யக்கூடிய காலத்தை பார்த்து, யார் செய்ய வேண்டும் என்கின்ற முக்கியத்துவத்தையும் பார்த்து, இந்த பும் சுவனத்திற்கு தேவையான வஸ்துக்கள் என்ன என்பதையும் பார்த்தோம்.*


    *இந்த பும்ஸுவனத்திற்க்கு ஹோம் சொல்லப்பட்டிருக்கிறது. அவரவர்களுடைய ஹௌபாசனா அக்னியில், சில தேவதைகளுக்கு ஹோமம் செய்துவிட்டு, பும்ஸுவன ஹோமத்தை செய்ய வேண்டும் என்று மகரிஷி நமக்கு காண்பித்துள்ளார்.*


    *அந்த ஹோமத்தில் சொல்லக்கூடியது ஆன மந்திரங்கள் மிகவும் அற்புதமானவை. அதன் பெருமைகளை தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு மகரிஷிகளும் ஒவ்வொரு விதமான சூத்திரங்களை காண்பித்துள்ளனர். அதை ஒவ்வொன்றாக வரிசையாக பார்க்கப் போகிறோம்.*


    *முதலில் யஜுர்வேதிகள் செய்யக்கூடியது ஆன பும்ஸுவனம். ஆபஸ்தம்பர் சூத்திரத்தை அனுசரித்து செய்யக்கூடிய பும்ஸுவனத்தை முதலில் பார்க்க இருக்கிறோம்.*


    *மிகவும் பலனை தரக்கூடிய மந்திரங்கள் இவைகள் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது என்றால், இராஜசூயம் என்கின்ற ஒரு யாகம், ஒரு இராஜாவானவர், நேர்மையான முறையில் நான் ஆட்சி செய்ய ஆசைப்படுகிறேன், என்று எந்த இராஜா நினைக்கிறாரோ, அந்த இராஜா இந்த இராஜசூயம் என்கின்ற யாகத்தை செய்ய வேண்டும்.*


    *அந்த யாகத்தின் நடுவில், ஒரு இஷ்டி வருகிறது. ஐந்து தேவதைகளை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஒரு இஷ்டி/அனுஷ்டானம்.*


    *ஐந்து தேவதைகள் அந்த அனுஷ்டானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நிறைய காமனைகளுக்காக இராஜசூய யாகத்தில் அந்த இஷ்டி ஆனது சொல்லப்பட்டிருக்கிறது. அதை சில காமனைகளுக்காக தனியாகவும் செய்யலாம் என்று ஆபஸ்தம்பர் நமக்கு காண்பித்துள்ளார்.*


    *வேதத்தில் இதற்காக ஒரு அனுவாகமே இருக்கிறது. தேவிகா அவிஸ் என்று பொதுவாக அந்த இஷ்டிக்கு சொல்வது வழக்கம்.*


    *ஐந்து தேவதைகளை வரிசைப்படுத்தி வேதம் நமக்கு காண்பித்து இருக்கிறது நிறைய காமனைகளுக்காக செய்கிறோம் என்பது ஒருபுறம், முதலில் தாதா, இரண்டாவது தேவதை அனுமதிஹி, மூன்றாவது இராகா, நான்காவது சினிவாலி, ஐந்தாவது புஹுஹூ என்று இந்த ஐந்து தேவதைகள்.*


    *இந்த ஐந்து பேரும் கால தேவதைகள் என்று பெயர். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான பலன்களை தேவதைகளிடம் இருந்து வாங்கி கொடுப்பார்கள் இந்த தேவதைகள்.*


    *_இதில் ஒவ்வொரு காமனைக்கும் ஒவ்வொரு வரிசை சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது தாதா அனுமதிஹி, இராகா, சினிவாலி, ஐந்தாவது புஹுஹூ என்று ஒரு வரிசை. இந்த வரிசைகள் காமனைகளுக்கு தகுந்தார்போல் மாறுபடுகிறது. அதனால் தான் வேதம் நமக்கு ஒரு அனுவாகத்திலேயே இதை காண்பித்துள்ளது._*


    *அதில் முதலில் வரக்கூடிய தான தேவதை தாதா. அதில் வேதம் பிரஜாகாமஹா என்று ஆரம்பித்துள்ளது. ஒரு கர்ப்பத்தில் ஒரு குழந்தையானது உற்பத்தி ஆகியிருக்கிறது என்றால் அந்த குழந்தையானது 5 தேவதைகளின் உடைய துணை கொண்டுதான் பிறக்கிறது. தாதா என்பவருடைய துணை கொண்டு அந்த குழந்தையானது கர்ப்பத்திலே உற்பத்தி ஆகின்றது.*


    *அனுமதி என்கின்ற தெய்வத்தினால் இந்த தம்பதிகளின் இரண்டு பேருடைய மனமும் முழுமையாக ஈடுபட்டு அந்த குழந்தையானது உற்பத்தி ஆகியிருக்கிறது. அந்த முழுமையான ஈடுபாட்டை கொடுக்கும் தேவதை அனுமதிஹி என்று பெயர்*


    *மூன்றாவது அந்த குழந்தைக்கு எந்த ஒரு அங்கஹீனமும் இல்லாமல் குழந்தையை உற்பத்தி செய்யக்கூடிய தேவதை இராஹா என்ற பெயர்.*
    *அந்த கர்பா தானத்தில், எந்த ஒரு கிருமியின் உடைய தாக்கமோ அல்லது அந்த குழந்தைக்கு தேவையில்லாத சில வஸ்துக்கள், எதுவுமில்லாமல் பார்க்கக் கூடியதான தேவதை, சினிவாலி என்று பெயர்.*


    *அந்தக் குழந்தையை சுற்றி, ஜலம் நிறைய இருக்க வேண்டும். அதில்தான் குழந்தை மிதக்கிறது. அதில் ஜலம் நிறைய இருப்பதற்கும் அந்த குழந்தையை தாங்கக்கூடிய சக்தியை கொடுப்பதற்கும் பிரசவ காலம் வந்தது ஆனால் அங்கு ஒரு வாயுவானது உற்பத்தியாகிறது பின்பு அந்த குழந்தையை வெளியே தள்ளுகிறது. அப்படித்தான் சுகப்பிரசவம் ஆனது நடக்கிறது. அந்த சக்தியைக் கொடுக்கக் கூடியது ஆன தெய்வம் புஹுஹூ என்று பெயர்.*


    *இந்த ஐந்து தேவதைகளும் சேர்ந்துதான் நமக்கு ஒரு சுகப்பிரசவம் ஆன குழந்தை பிறப்பதற்கு துணை புரிகிறார்கள். இந்த அனுஷ்டானம் ஆனது இந்த ஐவரையும் குறித்துதான் சொல்லப்பட்டிருக்கிறது.*


    *இந்த ஐந்து தேவதைகளையும் மனதில் கொண்டுதான் அந்த ஹோமம் நாம் செய்கிறோம். இந்த ஹோமத்தில் கர்ப்ப தோஷம் எதுவும் இல்லாமல் அந்த குழந்தை நல்லபடியாக உற்பத்தியாகி, எந்தவித அங்கஹீனம் இல்லாமல், மனதளவில் நல்ல உறுதியா அந்தக் குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து தான் அந்த ஹோமத்தை நாம் செய்கிறோம்.*


    *அந்த ஹோமத்தை சரியான முறையில் நாம் செய்தோம் ஆனால் கர்ப்ப தோஷம் இருக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது ஜோதிடத்தில் இதை நன்றாகப் பார்க்கலாம். ஜோதிடத்தில் கர்ப்ப தோஷங்கள் என்று சில இருக்கின்றன.*


    *_13 விதமான தோஷங்கள் ஒரு ஸ்திரீ யின் மூலம் அந்த கர்ப்பத்திற்கு ஏற்படும். அதேபோல புருஷர்களுக்கு எட்டு விதமான தோஷங்கள் அந்த கர்ப்பத்திற்கு ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது._*


    *அதாவது ஜோதிட சாஸ்திரம் இந்த விஷயத்தில் எப்படிப்பட்ட தோஷத்தினால் கர்ப்பமானது ஆகாமலேயே போகும், அல்லது உற்பத்தி ஆனால் எந்த விதமான தோஷங்கள் அந்த குழந்தைகளுக்கு சம்பவிக்க நேரும், என்று ஜோதிஷம் காண்பிக்கின்றது. அது விஷயமாக அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X