Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *05/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸவனம் என்கின்ற ஒரு முக்கியமான முகூர்த்தத்தை மேலும் தொடர்கிறார்.*


    *ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த பும்ஸுவனம் எப்படி செய்ய வேண்டும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை வேதம் காண்கின்ற வழியில் நாம் பார்த்து வருகிறோம்.*


    *இதற்கு ஏன் தனியாக ஒரு காலம் சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது, மூன்றாவது மாதம் பிறந்ததும் இந்த பும்ஸுவனம் செய்ய வேண்டும். ஒரு புருஷன் அல்லது ஸ்திரீ இவர்களுடைய சேர்க்கையினாலேயே, ஒரு குழந்தை உற்பத்தியாகி பிறந்து விடுகிறது என்று நாம் சாமான்யமாக நினைக்கிறோம். ஆனால் அப்படி அல்ல.*


    *அதற்கு நிறைய கால தெய்வங்களின் உடைய துணை இருக்கிறது. நிறைய தேவதைகளின் அனுக்கிரகத்தினால் தான் நமக்கு நல்ல குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு ஆண் ஒரு பெண் இவர்களுடைய சேர்க்கையில் குழந்தை பிறக்கிறது என்றால் எவ்வளவு குழந்தைகள் பிறந்து இருக்க வேண்டும்.?*


    *ஆனால் இல்லை எவ்வளவோ பிரார்த்தனைகள் செய்து, எத்தனையோ தெய்வங்களை ஆராதனை செய்து, தப்ஸ் செய்து தான் நல்ல குழந்தைகளை நாம் அடைகிறோம்.*



    *ஏன் அவ்வளவு தபஸ் செய்து தான் அடைய வேண்டிய சூழ்நிலை. காரணம் அந்த தெய்வங்களின் உடைய அனுகிரகம் நமக்கு பூரணமாக இல்லாமல் போய்விடுகிறது. அல்லது நாம் தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் மூலம் இதுபோல் நமக்கு சிரமங்கள் ஏற்படுகிறது என்று ஜோதிஷம் நமக்கு காண்பிக்கிறது.*


    *_பார்வதி பரமேஸ்வர சம்வாதமாக தான் நமக்கு ஜோதிட சாஸ்திரத்தை நம் முன்னோர்கள் காண்பித்துள்ளனர். அதிலே பரமேச்வரனுடைய வாக்காக சொல்கின்ற பொழுது, பரமேஸ்வரன் பார்வதி என்னிடத்தில் சொல்லும் பொழுது நாம் சுகமாக இருக்கிறோம் அல்லது துக்கப் படுகிறோம், நமக்கு கிடைக்கக்கூடிய தான வஸ்துக்கள் கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுகிறோம் சில வஸ்துக்கள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் கிடைக்காத நிலையில் துக்க படுகிறோம். அப்படி என்றால் இதற்கு காரணம் நாம் செய்த பிராரப்தம். புண்ணிய பாபங்கள் தான் காரணம்._*



    *ஏதோ தெரியாத காரணத்தினால் சின்ன சின்ன தவறுகளை செய்து விடுகிறோம், அது தான் முதலில் வந்து நிற்கிறது. அது தடுக்கிறது நம்முடைய வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கு. அல்லது ஒரு நல்ல குழந்தைகளை பெறுவதற்கு. அல்லது நாம் ஒரு நல்ல பொருளாதார வசதியை அடைய வேண்டும் என்று நாம் முயற்சி செய்யும் பொழுது, பெரிய தடையாக அது வந்து நிற்கின்றது.*



    *_ஆனால் அதற்காக கவலைப்பட வேண்டாம். ஆனால் அதற்கான பலன்களை அடைவது வழிகளை நான் சொல்கிறேன், அதைப் பற்றி கவலைப்படாதே என்று பரமேஸ்வரன் பார்வதியின் இடத்தில் சொல்வதாக ஜோதிடம் இதை நமக்கு காண்பித்து என்ன என்ன தோஷங்களின் மூலமாக நமக்கு இந்த கர்ப்ப தோஷம் சம்பவிக்கின்றது என்று ஜோதிட சாஸ்திரம் காண்பித்து இவ்வளவு தோஷங்களும் போக வேண்டுமானால், மந்திர பலம் தான் நமக்கு வேண்டும் என்று காண்பிக்கின்றது. அப்படிப்பட்ட மந்திரங்களை தான் பும்ஸவனத்தில் மகரிஷிகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்._*
    *ஒரு பெண் மூலம் ஏற்படக்கூடிய இந்த 13 விதமான தோஷங்களும் போகும், அதேபோல் ஆண் மூலமாக ஏற்படக்கூடிய எட்டு விதமான தோஷங்களும் போகும், இந்த ஹோமத்தின் மூலம் அப்படி என்றால், எவ்வளவு பெரிய விஷயம் நம்மால் இப்படி ஒரு பலனை ஒரே காரியத்திற்கு நாம் அடைய முடியாது.*
    *_இந்த கர்ப்ப தோஷங்கள் 13-ம் ஒரு பெண்ணினால் ஏற்படக்கூடியது என்ன என்று சொல்லும்போது, முதலில் குழந்தைகள் உற்பத்தி ஆகாமலேயே அந்த கர்ப்பத்தில் இருக்கக் கூடிய நிலை. அதற்கு ஒரு பாபம் காரணம். இரண்டாவது கர்ப்பம் தரிக்காத நிலை. மூன்றாவது கர்ப்பத்தில் ஒரு குழந்தை உற்பத்தி ஆனால் தங்காத நிலை. குறைப்பிரசவம். நான்காவது பிறந்த உடனேயே குழந்தை இறந்து விடுதல், ஐந்தாவது மரித்தே குழந்தை பிறத்தல்.


    ஆறாவது உற்பத்தி ஆகின்றது ஆனால் தங்கவில்லை 2/3 மாதம் கழித்து எங்கு போனது என்று தெரியவில்லை. ஏழாவது ஒரு குழந்தை உற்பத்தியானால் பக்கத்திலேயே ஒரு கட்டி உற்பத்தியாவது அல்லது கிருமிகள் என்னுடைய தாக்கம் அதிகமாக இருத்தல். எட்டாவது கர்ப்பம் உற்பத்தி ஆகின்றது ஆனால் அந்த குழந்தை எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருப்பது. குழந்தை உற்பத்தி ஆனவுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான செயல்கள் தெரியும். அந்த குழந்தையின் நாடி தெரியும் பிறகு வளர்ச்சி தெரியும். ஒரு திசையில் உற்பத்தியாகி மறு திசையில் பிரண்டு வரவேண்டும். தலைகுப்புற பிரண்ட பிறகுதான் கர்ப்பமானது ஆகும். ஒன்பதாவது முழுமையான கர்ப்பமாகி பிரசவம் ஆகாமலேயே இருப்பது. சுகப் பிரசவமே இல்லாமல்


    இருக்கிறது. இப்பொழுது நாம் பர்ஸில் இருந்து கார்டு எடுப்பது போல் குழந்தையை நாம் எடுக்கிறோம். இதுவும் ஒரு கர்ப்ப தோஷம். பத்தாவது அந்த குழந்தை பிறந்து விட்டாலும் கூட வெளி சூழல் அந்த குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாமல் இருப்பது. அதனால்தான் சில சமயம் அந்த குழந்தையை வேறு ஒரு இங்குபேட்டரில் வைத்து ஒரு வாரம் பத்து நாள் காப்பாற்றுகிறோம். 11வது அந்த குழந்தை அதிகப்படியான அங்கங்களோடு இருப்பது. அல்லது அங்கங்கள் ஒட்டிக் கொண்டிருப்பது. 12வது அந்த குழந்தை பிறந்த பிறகு இன்னுமொரு குழந்தை கர்ப்பத்திற்கு உற்பத்தி ஆகாமல் இருப்பது. இரண்டாவது குழந்தை பெற முடியாத நிலை. 13வது பரிவேஷம் என்று பெயர். கர்ப்பத்தில் குழந்தை உற்பத்தியாகாமல் வேறு இடத்தில் உற்பத்தியாகி பிறப்பது. இப்படி 13 விதமான தோஷங்கள் ஸ்திரீகள் மூலம் ஏற்படுகிறது என்று ஜோதிடம் நமக்கு காண்பிக்கின்றது._*



    *இதற்கு அந்தக் காலம் தான் காரணம். அந்தப் பெண்ணானவள் ருதுவாக கூடிய காலம் அல்லது கர்ப்பாதானம் செய்யக்கூடியதாக காலம் இதன் மூலமாகத்தான் கர்ப்ப தோஷங்கள் ஏற்படும். அல்லது தெரியாமல் செய்த தவறுகள் மூலமாகவும் இந்த சர்ப்ப தோஷங்கள் ஏற்படும். இப்படி ஸ்திரீகள் மூலம் ஏற்படக்கூடிய தோஷங்களை காண்பித்து புருஷர்கள் மூலம் ஏற்படக்கூடிய தோஷங்களை சொல்கிறேன் என்று பரமேஸ்வரன் சொல்கிறார், அது என்னவென்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X