Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *11/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு அனுஷ்டானத்தின் பெருமையை மேலும் தொடர்கிறார்.*


    *இந்த பும்ஸுவனம் என்கின்ற அனுஷ்டானத்தில் ஹோமம் மிகவும் முக்கியம். இதில் நாம் கால தேவதைகளை ஆராதிக்கிறோம். தாதா இராஹா சினிவாலி அநுமதிஹி கூஹுஹூ இன்றைய இந்த ஐந்தும் காளா தேவதைகள் என்ற பெயர்.*


    *இந்த ஐந்து தேவதைகளுக்கும் பிரதானமானவர் தாதா என்கின்ற தேவதை. இந்த தேவதையை உத்தேசித்து தான் நாம் ஆகுதிகள் செய்கிறோம் பும்ஸவனத்தில். இதையேதான் சீமந்தத்திலும் நாம் செய்கிறோம். இந்த இரண்டிலும் ஹோமத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது.*


    *ஆனால் பலனில் வித்தியாசங்கள் இருக்கின்றன. பும்ஸவனத்தில் வேறு மாதிரியான பலன்கள். சீமந்த த்தில் நாம் செய்யக்கூடிய ஹோமத்தில் வேறு விதமான பலன்களை அடைகிறோம். அதனால் இந்த இரண்டையும் சேர்த்து செய்தாலும், ஹோமங்களை தனித்தனியாகத்தான் செய்யவேண்டுமென்று மகரிஷிகள் நமக்கு காண்பிக்கின்றனர்.*


    *காரணம் இரண்டினாலும் பலன்கள் வித்தியாசப்படுகின்றது. இது விஷயமாக வேதம் சொல்கின்ற பொழுது, பும்ஸவனத்தில் நாம் என்ன மாதிரியான பலன்களை அடைகிறோம் என்று வேதம் காண்பிக்கிறது. தேவிகாஹா என்று இந்த ஐந்து தேவதைகளுக்கும் பெயர். அதாவது நாம் எதிர்பார்த்து செய்யக்கூடியதாக காரியத்தில், முழுமையான பலனை காட்டுபவர்கள் இந்த ஐந்து தேவதைகள். இந்த ஐந்து தேவதைகளும் கர்ப்பத்தில் உற்பத்தி ஆகக்கூடிய குழந்தைக்கு என்ன விதமான பலன்களை அடைகிறோம் என்பதை வேதமே நமக்கு காண்பிக்கிறது.*


    *தாதா என்பவர் அந்த கர்ப்பத்தில் நல்ல ஆரோக்கியமான குழந்தையை உற்பத்தி பண்ணி கொடுக்கிறார். சிருஷ்டி கர்த்தா என்று தாதாவிற்கு பெயர். அநுமதிஹி என்கின்ற தேவதை அந்த தம்பதிகளுக்குள் அன்னோன்யம் மனதளவிலும் உடலளவிலும் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.*


    *இராஹா என்கின்ற தேவதை, நல்ல வாரிசை அனுகிரகம் செய்கின்றார். சினி வாலி என்கின்ற தேவதை கர்ப்பத்தில் உற்பத்தி ஆகக்கூடிய குழந்தைக்கு அங்கங்களை அனுகிரகம் செய்வதுடன் வேறு எந்த கிருமிகள் மூலம் தொந்தரவு இல்லாமல் பாதுகாக்கிறார்.*


    *அப்படி கர்ப்பத்தில் உற்பத்தி ஆகக்கூடிய குழந்தைக்கு, கூஹுஹூ என்கின்ற தேவதை பேசக்கூடிய தான சக்தியை அனுகிரகம் செய்கிறார். பேசக்கூடிய தான சக்தி மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியம்.*


    *காரணம் வாக்குதான் நமக்கு பெரிய பலம். ஆம் நம்முடைய வாழ்க்கையில் எதிர்பார்த்த மேன்மையை பெறுவதற்கு, மந்திரங்கள் கூட இருக்கிறது. அந்த மந்திரங்களை சொல்வதற்கு வாக்கு மிகவும் முக்கியம். பேச்சுத் திறன் மிகவும் முக்கியம். இது ஒண்ணு தான் மனிதனுக்கும் மற்ற பிராணிகளுக்கும் வித்தியாசத்தை காட்டுகிறது.*


    *அதனால் இந்த வாக்கு திறன் அதாவது பேச்சு திறன் நமக்கு மிகவும் தேவை என்பதினால்தான், கூஹுஹூ என்கின்ற தேவதை அந்தப் பேச்சுத்திறனை கர்ப்பத்திலேயே நமக்கு அனுக்கிரகம் செய்கிறார் மகரிஷிகள் காண்பிக்கின்றனர்*



    *பேச்சை சொல்லி கொடுக்கிறாள் என்று வேதம் நமக்கு காண்பிக்கிறது. வாட் சக்தி நமக்கு நிறைய வேண்டுமென்றால் இந்த கூஹுஹூ என்கின்ற தேவதை ஆராதிக்க வேண்டும். அப்படி ஒரு கணவன் மனைவி இருவரும் உடலளவிலும் மனதளவிலும் ஒத்து இருந்து ஒரு நல்ல வாரிசு ஏற்படுத்தக்கூடியது இந்த மந்திரங்கள்.*


    *ஆகையினாலே தான் பழைய நாள் மட்டும் இந்த நாட்களில் கூட, கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு எதைப் பார்க்கிறோமோ இல்லையோ பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்பொழுது. பிளட் குரூப் சேர்ந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    கல்யாணத்திற்காக பெண் பார்க்கச் செல்லும்போது கையில் என்னவெல்லாம் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்றால் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் மஞ்சள் கிழங்கு புஷ்பம் இவை எல்லாவற்றையும் விட, மருத்துவ பரிசோதனை சான்று மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்கின்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம். அப்படி ஒரு பிரச்சாரம் வந்துவிட்டது.*


    *ஏனென்றால் இரண்டு பேருக்கும் பிளட் குரூப் சரியாக இருந்து ஒத்துப்போக வேண்டும் என்பதை நாம் நினைத்துக் கொள்கிறோம். பழைய நாட்களில் அப்படி எல்லாம் பார்க்கவில்லை. இந்த மந்திரங்களே அவர்களுக்கு சரியான முறையில் குரூப்பை உருவாக்கி நல்ல வாரிசுகளை கொடுத்துவிடும்.

    அநுமதிஹி என்கின்ற தேவதை அதைதான் நமக்கு அனுக்கிரகம் செய்கிறாள். தாதா என்பவர் குழந்தையை உற்பத்தி செய்ய துணை புரிகிறார். நல்ல வாரிசை கொடுக்கிறார். அநுமதி என்கின்ற தேவதை இந்த இருவர் மூலமும் உற்பத்தியாக கூடிய குழந்தைக்கு நல்ல இரத்த ஓட்டமும், ஆரோக்கியமான மனநிலையையும், அனுகிரகம் செய்யக்கூடியவர் அனுமதிஹி என்கின்ற தேவதை.*


    *இப்படி தேவதைகளின் உடைய அனுக்கிரகத்தினால் நமக்கு, அனைத்தும் சரியாக ஆகும். நாம் உடல் உறுப்பு எடுத்துக்கொண்டுபோய் பார்த்து சரியாக இருந்து அதனால் மட்டுமே குழந்தை பிறக்கும் உற்பத்தி ஆகும் என்று முடியாது. இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் இந்த தேவதா சக்தி. அந்த தேவதைகளின் உடைய அனுக்கிரகத்தினால் தான் நாம் நல்ல வாரிசை பெற முடியுமே தவிர, வெறும் மெடிக்கல் டெஸ்ட் மூலமாக நாம் குழந்தையை பெற முடியுமா, முடியாது. இதையெல்லாம் நாம் மனதில் கொள்ள வேண்டும் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.*


    *கல்யாணத்தின் உடைய ஆரம்பமே மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட் என்றால், அது எப்படி அமையும்? இதையெல்லாம் நாம் யோசனை செய்து பார்க்க வேண்டும். ஆகையினாலே இந்த இரண்டு தம்பதிகளும் சேர்ந்து, எந்தவிதமான பிளட் குரூப் ஆக இருந்தாலும் சரி, எந்த விதமான ஆரோக்கிய நிலையில் இருந்தாலும் சரி, ஆரோக்கியமான ஒரு வாரிசை அடைவதற்கு, இந்த மந்திரங்கள் மிகவும் துணை புரிகிறது என்பதை வேதம் நமக்கு காண்பிக்கிறது.*


    *இந்த ஐந்து விதமான தேவதைகளும் கர்ப்பத்தில் உற்பத்தியாகின்ற குழந்தைக்கு என்ன விதமான அநுகிறஹத்தை செய்கிறார்கள் என்று சொல்லும் பொழுது, தாதா என்பவர் நல்ல குழந்தை உற்பத்தி செய்து கொடுக்கிறார். அனுமதி என்கின்ற தேவதை நல்ல பிளட் குரூப் கொடுத்து ஆரோக்கியமான குழந்தையை அனுக்கிரகம் செய்கிறார். இராஹா என்கின்ற தேவதை எந்த ஒரு கிருமி முலம் குழந்தை பாதிக்கப்படாமல் இருக்க உதவி செய்கிறார்.

    சினி வாலி என்கின்ற தேவதை அந்த குழந்தை பத்து மாதம் முழுவதுமாக இருப்பதற்கு துணை புரிகிறார். புஹுஹூ என்கின்ற தேவதை வாக் சக்தியை கொடுத்து துணை புரிகிறார். இப்படி வேதம் நமக்கு காண்பிக்கிறது.*



    *மேலும் சில காமனைகளுக்காக, இந்த தேவதைகளை நாம் ஆராதிக்கலாம் என்று வேதம் காண்பிக்கிறது. அதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X