Announcement

Collapse
No announcement yet.

seemantham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • seemantham.

    முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சீமந்தம் தொடர்பான தகவல்களை மேலும் தொடர்கிறார்.*
    *ஸ்தீரி சம்ஸ்காரம் ஆக இந்த சீமந்தோநயனம் காண்பிக்கப்படுகிறது. அதாவது ஒரு பெண்ணினுடைய கர்ப்பத்தில் எந்தவிதமான தோஷங்களினாலும் பிறக்கக் கூடிய குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக செய்யப்படும் கூடியதுதான் இந்த சீமந்தோநயனம் என்கின்ற முகூர்த்தம்.*


    *சீமந்தோநயனம் என்றால் என்ன என்று பார்த்தோமேயானால் கர்பாசயனம் வாசல் துவாரம். இதற்கு சீமந்தம் என்று பெயர். கருட புராணம் இதைப்பற்றி காண்பிக்கின்றது.*


    *ஜீவோத்பத்தி அத்தியாயம் என்று கருட புராணத்தில் ஒரு அத்தியாயம் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஜீவனும், கர்ப்பத்தில் எப்படி உற்பத்தி ஆகின்றது, எந்த வழியாக உற்பத்தி ஆகிறது, எந்த வழியாக பிறக்கிறது, இதை கருட புராணம் காண்பிக்கிறது.*


    *அதாவது கர்ப்பத்தில் குழந்தை உள்ளே சென்று உற்பத்தி ஆகக்கூடிய வாசல் வேறு, பிரசவம் ஆகும் பொழுது குழந்தை வரக்கூடிய வாசல் வேறு. பிரசவ நேரத்தில் குழந்தை வரக்கூடிய வாசலுக்கு தான் சீமந்தம் என்று பெயர்.*
    *கர்பாசயத்தில் ஒரு ரேகை இருக்கிறது. அந்த ரேகை ஒரு வாசலாக அகலம் ஆகிறது. அந்தக் குழந்தை வெளியில் வருவதற்கு தகுந்தார்போல், அந்த ரேகை விரிகின்றது.*
    *அதன் வழியாகத்தான் குழந்தை வெளியே வருகிறது. அந்த ரேகை எப்படி இருக்கும் என்று சொல்கின்ற பொழுது, ஸ்திரீகள் வகிடு எடுத்து தலை வாரி கொள்கிறார்கள். அந்த வகிடு போல்தான் கர்பாசயத்தில் அந்த ரேகை இருக்கும்.*


    *அதனாலேதான் ஸ்திரீகள் தலையில் எடுத்துக் கொள்கின்ற வகிடுவிற்கும் சீமந்தம் என்று பெயர். இந்த இரண்டிற்கும் தொடர்பு உள்ளது. ஆகையினாலே தான் பெண்கள் வகிடெடுத்து தலைவாரிக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.*
    *வகிடு எடுக்காமல் தலைவாரிக் கொண்டால் கர்ப்பத்தில் தோஷங்கள் ஏற்படும். கர்பாசயத்தில் உள்ள ரேகையானது செயல்படாமல் போகும். அதனால்தான் பெரியோர்கள் பெண் குழந்தைகள் வகிடு எடுத்துக்கொள்ள*


    *வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த இரண்டுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.*


    *மந்திரம் சொல்லி அந்த கர்ப்பாசயத்தில் ஒரு கோடு போடுவோம் அந்த ரேகையில், சீமந்த த்தில் நாபியிலிருந்து ஆரம்பித்தது அந்த ரேகையை மந்திரம் சொல்லி, நேராக அந்த ரேகையை வகிடு வரைக்கும் கொண்டு வருவார்கள். பின்பு அந்த வஸ்துக்களை பின்னால் போட்டுவிடுவார்கள் இதை சீமந்ததில் செய்வதில் பார்க்கலாம்.*


    *என்ன செய்கிறோம் என்றால் அந்த கர்பாசயத்தில், பிரசவ சமயத்தில் அந்த கர்ப்பம் சரியானபடி விரிந்து, அந்த குழந்தை முழுமையாக வெளியில் வந்து சுகப்பிரசவம் ஏற்பட்டு பிறக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவது தான் இந்த சீமந்தோநயனம்.*


    *மேலும் கர்ப்ப தோஷம் எதுவாக இருந்தாலும் அது அந்த குழந்தையை பாதிக்க கூடாது என்பதற்காக செய்யப்படுவது தான் இந்த சீமந்தோநயனம். சீமந்தம் என்றால் அந்த ரேகைக்கு பெயர். உனநயனம் என்றால் கோடு போடுவது என்று அர்த்தம்.*


    *அதில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவது அதுதான் உன்நயனம். நம் மகரிஷிகள் அதனால் இந்த முகூர்த்தத்திற்கு சீமந்தோநயனம் என்று வைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இதற்கான காலம் நான்காவது மாதத்தில் செய்யப்பட வேண்டுமென்று ஆபஸ்தம்பர் காண்பிக்கிறார்.*


    *இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஏன் நான்காவது மாதம் இதற்கு சொல்லப் படுகின்றது என்றால், இங்கே சூட்சுமமாக சில விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.*
    *ஒவ்வொரு ஜீவனும் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது, ஒரு சரீரத்தோடு தான் கிளம்பி செல்கிறார்கள். அந்த சரீரத்திற்கு சூக்ஷ்ம சரீரம் என்ற பெயர். நமக்கு மூன்று விதமான தேகங்கள் இருக்கின்றன.*


    *அதாவது ஸ்தூல சரீரம் சூக்ஷ்ம சரீரம் காரண சரீரம். பஞ்சபூதங்களின் ஆளானது ஸ்தூல சரீரம். கண்ணால் பார்க்கக்கூடிய தேகத்திற்கு தான் ஸ்தூல சரீரம் என்ற பெயர். இது இல்லாமல் சூக்ஷ்ம சரீரம் என்று ஒன்று உள்ளது. நமக்கு காது என்கின்ற ஒரு இந்திரிய இருக்கிறது அதனால் நம்மால் கேட்க முடிகிறது. கண் என்கின்ற இந்திரியம் மூலம் நம்மால் பார்க்கக் கூடிய சக்தி கிடைக்கிறது. மூக்கு என்கின்ற இந்திரியம் மூலம் தான் நமக்கு

    வாசனைகளை கிரகிக்க முடிகிறது. நாக்கு என்கின்ற இந்திரியம் மூலம் தான் ருசி நாம் உணர முடிகிறது. இப்படி சக்தி சக்தி என்கின்ற நாம் சொல்வது தான் சூக்ஷ்ம சரீரம் என்ற பெயர். இந்த சக்தி ஒவ்வொருவருக்கும் சரியான முறையில் இருக்கிறது. இந்த ஸ்தூல சரீரம் சரியான முறையில் இல்லாவிட்டால், கண் இருந்தும் நம்மால் பார்க்க முடியவில்லை. காது இருந்தும் கேட்க முடியவில்லை. என்ன காரணம் என்றால் சூக்ஷ்ம சரீரத்தில் எந்த குறைபாடும் இல்லை. ஸ்தூல சரீரத்தில் தான் குறைபாடு.*


    *அதாவது ஒரு கணவன் மனைவி கர்ப்பத்தில் ஒரு குழந்தையை உற்பத்தி செய்கின்றனர். அதாவது ஸ்தூல சரீரத்தை மட்டும்தான் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். சூக்ஷ்ம சரீரத்தோடு ஒரு ஜீவன் உற்பத்தி ஆகின்றது. போன பிறவியில் இருந்து அவன் மூன்று வஸ்துகளை எடுத்துக் கொண்டு வருகிறான் என்று உபநிஷத் காண்பிக்கின்றது.*


    *அவன் அவன் படித்த படிப்பு புண்ணிய பாவங்கள் பிரஞ்யா அதாவது நினைவு. இந்த மூன்றையும் எடுத்துக் கொண்டுதான் ஒவ்வொரு ஜீவனும் லோகாந்தரங்களுக்கு சென்று புண்ணிய பாவங்களை அனுபவித்து, கொஞ்சூண்டு புண்ணியம் இருக்கின்ற பொழுது, இந்த கர்ப்பத்தில் வந்து உற்பத்தி ஆகின்றனர்.*


    *இந்த சூக்ஷ்ம சரீரம் ஆரம்பிக்கின்ற காலம்தான் இந்த நான்காவது மாதம். அதுவரையிலும் அந்த ஸ்தூல சரீரம் ஒரு பிண்டமாகத்தான் இருக்கும். ஒரு உருவம் இல்லாமல் அந்த கர்ப்பத்தில் இருக்கும். ஒரு முழு உருவம் கிடைத்து அந்த சூக்ஷ்ம சரீரம் செயல்பட ஆரம்பிக்கின்ற காலம்தான் நான்காவது மாதம். அதனால்தான் நான்காவது மாதத்தில் இந்த சீமந்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.*


    *அதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கின்றது அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X