Announcement

Collapse
No announcement yet.

seemantham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • seemantham.

    25/04/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சீமந்தோநயனம் என்ற ஒரு முகூர்த்தத்தை பற்றி விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம் அதில் மேலும் தொடர்கிறார்.*


    *சீமந்த த்தில் ஆகுதிகளை முதலில் செய்த பிறகு, சீமந்தோநயன முகூர்த்தம் செய்து கொள்ள வேண்டும். இது விஷயமாக ஆபஸ்தம்பர் சொல்கின்ற பொழுது, அக்னிக்கு மேற்குப் புறமாக, கர்ப்பவதியான பெண்ணை கிழக்கு முகமாக உட்கார வைத்து, கையில் சில வஸ்துக்களை வைத்துக்கொண்டு, மந்திரம் சொல்லி, அந்தப் பெண்ணின் நாபியிலிருந்து ஆரம்பித்து ஒரு ரேகை மேல்நோக்கி போட வேண்டும்.*


    *கையில் உள்ள வஸ்துக்களை நாபியிலிருந்து ஆரம்பித்து நேராக மேல் நோக்கி சென்று அந்தப் பெண்ணின் வகிடு மூலமாக ரேகை இட்டு பிறகு பின்புறம் போட வேண்டும். கையில் என்ன என்ன மாதிரியான வஸ்துக்கள், முள்ளம்பன்றி உடைய முள், தர்ப்பபூஞ்ஜீலம் என்று சொல்லக்கூடியது ஆன காண்டதோடு கூடிய தர்பை, பேயத்தி என்று சொல்லக்கூடிய தான அந்த மரத்தின் கிளை, இதையெல்லாம் சேர்த்து கையில் வைத்துக்கொண்டு, அந்த ரேகையை மந்திரம் சொல்லி போட வேண்டும். இதற்குத்தான் சீமந்தோநயன முகூர்த்தம் என்று பெயர்.*


    *இந்த முகூர்த்தத்தின் போது மூன்று விதமான மந்திரங்களைச் சொல்லி இதை செய்ய வேண்டும். வியாகர்தி என்கின்ற மந்திரம், இராகா என்கின்ற தேவதையை உத்தேசித்து சொல்லக்கூடியது ஆன இரண்டு மந்திரங்கள்.*


    *இந்த மூன்று மந்திரங்களையும் சொல்லி முடிக்க கூடிய தருவாயில் அந்த ரேகையை போட வேண்டும். எந்த ஒரு காரியத்தை செய்யும் பொழுது ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டுமென்று சொல்லி இருந்தால், அந்த மந்திரத்தை முதலில் சொல்லி, அந்த மந்திரம் முடிகின்ற தருவாயில் அந்த காரியத்தை செய்ய வேண்டும்.*


    *அதேபோல் தான் இந்த மூன்று மந்திரங்களையும் சொல்லி, மூன்றாவது மந்திரம் முடியக்கூடிய தருவாயில், இந்த ரேகையை போடவேண்டும். மிகவும் அற்புதமான மந்திரங்கள் இந்த மூன்று மந்திரங்கள்.*


    *முதலில் சொல்லக்கூடிய தான மந்திரம் வியாகிர்தி. போர்ப வஸ்சுவஹ என்று சொல்லக்கூடியது தான் வியாகிர்தி என்று பெயர். இந்த வியாகிர்தி என்பதை நாம் ஏன் நம்முடைய கர்மாக்களில் சொல்கிறோம் என்பதை முன்னரே பார்த்தோம்.*


    *நாம் நிலையாக இந்த உலகத்தில் வாழ்வதற்காகவும், நம்முடைய புத்தி மனசு இந்திரியங்கள் அனைத்தும், ஒருமித்து நமக்கு செயல்படுவதற்காகவும், சொல்லக்கூடிய தான் இந்த மந்திரம்.*


    *இந்த வியாகிர்தி என்கின்ற மந்திரத்தோடு சேர்த்து இராகா என்ற தேவதைக்கு சொல்லக்கூடிய மந்திரத்தையும் சொல்லவேண்டும். இந்த இரண்டாவது மந்திரம் என்ன சொல்கிறது என்றால் மிகவும் நல்லெண்ணத்தோடு, இந்தப் பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆனது அமைய வேண்டும் எனக்கு என்ற பிரார்த்தனையோடு உள்ள நான், அழைக்கிறேன்.*


    *இராகா என்கிற தேவதை அழைக்கிறேன். பௌர்ணமாசி இராகா, முழுமையான பௌர்ணமி அந்தக் கால தேவதைக்கு இராகா என்று பெயர். எப்படி இருக்கிறாள் என்றால் இந்த கர்ப்ப காலத்திலுள்ள பெண்ணிற்கு மிகவும், அனுகிரகம் செய்யவேண்டியதான தேவதை, கூப்பிட்டால் உடனே வரக்கூடிய தான தேவதையும், இராகா என்கிற இந்த தேவதை.*


    *பரிசுத்தமாக நான் இருக்கிறேன். மிகவும் ஆச்சாரத்துடன் கட்டுப்பாடுடன் நான் இருக்கிறேன். நான் சுரம் தப்பாமல் எந்த ஒரு அட்சரமும், தவறு இல்லாமல் நான் சொல்லக்கூடியது தான, இந்த மந்திரத்தை கேட்டு, அந்த இராகா என்கிற தேவதை இங்கு வரவேண்டும் என்பதற்காக, நான் அழைக்கிறேன்.*


    *இந்த பிரசவ காலத்தில் ஒவ்வொரு பெண்ணிற்கும், என்னவெல்லாம் தேவை, சுகப்பிரசவம் ஆக எப்படி ஆக்க முடியும், என்று நன்றாக தெரிந்தவள் இந்த இராகா என்கிற தேவதை.*


    *அப்படிப்பட்ட இந்த தேவதை நான் பிரார்த்தனை செய்வதை கேட்கவேண்டும், நம்மை தான் அவன் அழைக்கிறான் என்று தெரிந்து கொண்டு, அந்த தேவதையான வில் இங்கு வந்து, இந்தப் பெண்ணிற்கு அந்த கர்பாசயத்தில், எந்தவிதமான தோஷம் இருந்தாலும், அதை போக்க வேண்டும்.

    பிரசவ காலம் வரும்பொழுது அந்தக கர்பாசயத்தில் எந்த அளவுக்கு அந்த வாயிலானது திறக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஒரு அடையாளத்தை செய்ய வேண்டும் இந்த தேவதையான இராகா. அடையாளம் செய்து வைத்தால்தான் பிரசவகாலத்தில் திறக்கும். அப்படி செய்து கொடுக்க வேண்டும் இந்த இராக்கா என்கிற தேவதை.*


    *நான் கூப்பிட வேண்டும் என்று எதிர் பார்க்காமலேயே அந்த தேவதை வரவேண்டும். தானாகவே அந்த தெய்வமானது வந்து, இந்தப் பெண்ணிற்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். இப்படியாக இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*


    *தெரிந்து கொண்டு அந்த இராகா என்கிற தேவதை, கர்ப்பத்தில் அந்த குழந்தைக்கு தேவையான அளவு தண்ணீரை பாதுகாத்து பிரசவ காலம் வரும்பொழுது அந்த குழந்தையானது திரும்பி கர்ப்பத்தின் வாயிலும் சரியான அளவு திறந்து, அந்த குழந்தை சுகப்பிரசவமாக பிறப்பதற்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும்.*


    *எப்படி ஒரு வேஷ்டியும் துண்டும் இணைந்து இருக்கின்ற பொழுது, அதில் ஒரு ரேகையை போட்டு எப்படி நாம் பிரித்து எடுப்போமோ, அதேபோல் கர்ப்பத்தில் ஒரு ரேகையை இந்த தேவதை போட வேண்டும். மேலும் 100 வயது ஆரோக்கியமாக வாழக்கூடிய தான இந்த குழந்தையை, எனக்கு கொடுக்க வேண்டும். அந்த குழந்தை ஆணோ பெண்ணோ புத்திசாலித்தனமாக கெட்டிக்காரனாக இருக்க வேண்டும்.

    அந்த ரேகை முழுமையாக போட வேண்டும். நடுவில் கட் ஆகாமல் போடவேண்டும். இப்படி இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது அடுத்த மந்திரம் அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X