Announcement

Collapse
No announcement yet.

அநத்யயனமா? அத்யயனமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அநத்யயனமா? அத்யயனமா?

    அநத்யயனமா? அத்யயனமா?
    ------------------------------------------------------

    நாளை (19-11-21) முதல் தினம்தோறும் அத்யயனம்.


    கார்த்திகை கார்த்திகை முதல் தை ஹஸ்தத்தத்திற்கு முதல் நாள் வரையிலான காலம் ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய ப்ரபந்த அநத்யயன காலமாகும். இந்த வருடம் அநத்யயன காலம் 19-11-21 முதல் 23.01.22 வரையாகும். அதாவது திருமாளிகைளில் இந்த காலத்தில் ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய ப்ரபந்த பாசுரங்களை ஸேவிக்கும் வழக்கம் இல்லை.


    நம்பெருமாளின் நியமனப்படி, திருமங்கையாழ்வார் காலத்தில், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்னவர்கள், கார்த்திகை கார்த்திகையன்று ஆழ்வார் திருநகரிக்கு சென்று, நம்மாழ்வாரை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு ஸ்ரீரங்கம் வந்து, வைகுண்ட ஏகாதசி சமயத்தில் அத்யயன உத்சவத்தை ஸ்ரீரங்கத்தில் நடத்தினர்.


    ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் முன்னிலையில், நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை எம்பெருமான் திருச்செவி சாய்த்து இன்புறுவதே அத்யயன உத்சவமாகும். பின்னர் நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளப்பண்ணி விட்டு ஸ்ரீவைஷ்னவர்கள் ஸ்ரீரங்கம் திரும்பி வருவதற்கு தை ஹஸ்தம் ஆகிவிடும்.


    ஆகையால் தான் திருமங்கைஆழ்வார் திருநக்ஷத்திரமான கார்த்திகை கார்த்திகை முதல் தை ஹஸ்தத்தத்திற்கு முதல் நாள் வரை காலம் நாலாயிர திவ்ய ப்ரபந்த அநத்யயன காலமாக கருதப்பட்டு திருமாளிகைகளில் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் ஸேவிக்காமல் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரமான தை ஹஸ்தம் முதல் மீண்டும் நாலாயிர திவ்ய ப்ரபந்த அத்யயன தொடக்கமாகும்.


    பின்னர், கலியின் கொடுமையால் நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள் கலியன் காலத்திற்கு பிறகு இவ்வுற்சவம் சில காலம் மறைந்து, வழக்கத்தில் இல்லாத சூழ்நிலை இருந்தது. அப்பொழுது அத்யயன உத்சவமும் நடைபெறவில்லை. நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களை நம்மாழ்வாரிடமிருந்து அதிகரித்த நாதமுனிகள், திருமங்கை ஆழ்வார் நடத்திய அத்யயன உத்சவத்தை மீண்டும் கோலாகலமாக கொண்டாடினார்.


    மீண்டும் சுவாமி தேசிகன் காலத்தில் அத்யயன உத்சவம் நடைபெற சில தடங்கல்கள் உண்டாகின. அப்பொழுது அத்யயன உத்சவத்தை தடையில்லாமல் நடத்திய பெருமை சுவாமி தேசிகனையே சேரும்.


    மார்கழி மாதம் மட்டும் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை ஸேவிக்கும் வழக்கம் திருமாளிகைகளில் உண்டு.


    சுவாமி தேசிகன் அவதாரத்திற்கு பின்னர் அநத்யயன காலம் தேசிக ப்ரபந்த அத்யயன காலம் என்று கொண்டாடப்படுகிறது.


    சுவாமி தேசிகனின் ப்ரபந்த ஸாரம் என்னும் ப்ரபந்தம் நாலாயிர திவ்ய ப்ரபந்த்தின் பலனை அளிக்கும் பாசுரங்கள் ஆகும். இதனையே சுவாமி தேசிகன் "நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வு" என்று கொண்டாடியுள்ளனர்.


    அநத்யயன காலத்தில் தினம்தோறும் நம் இல்லங்களில்
    1) நாலாயிர திவ்ய ப்ரபந்த தனியன்களையும்,
    2) சுவாமி தேசிகன் அருளிய தேசிக ப்ரபந்தங்களையும்,
    3) சுவாமி தேசிகனை போற்றும் பிள்ளையந்தாதியையும்
    ஸேவித்து நாம் ஆசார்ய அநுக்ரஹ பாத்ரர்களாக வேண்டும்.


    ஆம், அநத்யயன காலம் தேசிக ப்ரபந்த அத்யயன காலமாகும்.


    https://apnswami.wordpress.com/2021/11/18/anadhyayanama-adhyayanama/


    ஸ்ரீ APN சுவாமி காலக்ஷேபத்தில் அருளியதின் தொகுப்பு.
    இப்படிக்கு,
    ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்
    18-11-2021


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X