Announcement

Collapse
No announcement yet.

பாடசாலை குழந்தைகள் என்னுடையவை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாடசாலை குழந்தைகள் என்னுடையவை!

    பாடசாலை குழந்தைகள் என்னுடையவை!

    .


    ஏழை பாட்டி ஒருத்தி அப்பளம், வடகம் இட்டு, பெரியவாளுக்காக மடியாக பண்ணிக்கொண்டு வந்ததாக கூறி, சமர்ப்பித்தாள். கனிவுமயமாக அவளிடம் கூறினார் பெரியவா……..

    ” லோகம் நன்னா இருக்கணும்னா வேதம் இருந்துண்டே இருக்கணும். அப்படி இருக்க பண்றதுக்காகதான் என்னால ஆனதெல்லாம் பண்ணிண்டிருக்கேன். கஷ்டப்பட்டு ஆளை சேர்த்து அங்கங்கே வேத பாடசாலைகள் நசிச்சு போகாம காப்பாத்தி குடுக்க முயற்சி பண்ணிண்டிருக்கேன்.


    வேற எந்த படிப்பு படிச்சு எந்த தொழிலுக்கு போனாலும் கை நிறைய சம்பளம்னு இருக்கற இந்த நாள்லயும் என் வார்த்தையை கேட்டுண்டு சில தாயார் தோப்பனார் பசங்களை பாடசாலைக்கு அனுப்பிசிண்டிருக்கா……என்னை நம்பிண்டு கொழந்தைகளை ஒப்பு கொடுத்திருக்கா…. வரப்போற காலத்திலையும் வேதம் போய்டாம கொஞ்சமாவது ரக்ஷிச்சு கொடுக்க போற அந்த குழந்தைகள்தான் எனக்கு உயிர் மாதிரி………ஆனதுனால, நீ என்ன பன்ன்றேன்னா…..சின்ன காஞ்சிபுரத்துல மடத்து பாடசாலை இருக்கு…….அங்கே சுந்தரம் ன்னு சமையல் பாத்துக்கறவன் இருக்கான். அவன்ட்ட, ஒன் அப்பளம், கருடாத்தை குடுத்து குழந்தைகளுக்கு வறுத்து போட சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு. அதுகள் அப்பளாம், கருடாம் பாத்தே எத்தனையோ காலமாயிருக்கும். அதனால சந்தோஷமா சாப்டும். அதுவே எனக்கு பரம சந்தோஷம்………நம்மை நம்பிண்டு அதுகளை அனுப்பினதுக்கு பதிலா, நாமும் ஒண்ணு பண்ணினோம்னு சந்தோஷம்”


    பெரியவாளின் சரீரதிற்காக கொண்டு வந்த தின்பண்டங்கள், அவரது உயிரான வேதம் பயிலும் சிறுவர்களுக்கு செல்வதில், பாட்டிக்கும் ரொம்ப சந்தோஷம்.

    source: mahesh
Working...
X