Announcement

Collapse
No announcement yet.

aagaaram (unavu)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aagaaram (unavu)

    சத் உணவு :
    பிராமணன்,ஷத்திரியன்,வைஸ்யன் ,மற்றவர்கள் யாராக இருந்தாலும், சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுஇருந்த விதி முறைப்படி நியாயமாக தன உழைப்பால் பெறப்பட்ட பொருட்கள் மூலம் எந்த சாத்வீகமான உணவை உட்கொள்ளுகிறானோ அதுவே "உண்மையான உணவு"(சத்ய ஆஹாரம்) அந்தணன் தானம் வாங்கியும் தன் வாழ்நாளை கழிக்கலாம். அது சாஸ்திர சம்மதமே.ஆனால் கொடுப்பவனுக்கு எந்த வித உபகாரமும் செய்யாமல் தன் தர்மம் என்று யாசித்தல் மூலமாகவே எவன் தன் வாழ்கையை நடத்துகிறானோ,அவன் அந்தணர்களில் மிகவும் இகழத்தக்கவன்.அதனால் தவ வலிமை குறைந்து வேலை செய்யாமல் சோம்பேறித்தனம் ஏற்படுகிறது. ஆகவே சாஸ்திரத்தில் சொலப்பட்டு இருந்தாலும் இப்படிப்பட்ட உணவு ஸத்யஉணவு ஆகாது. ஆகவே தானம் கொடுப்பவனுக்கு பதிலுதவி செய்தோ ,உஞ்ச வ்ருத்தி செய்தோ அந்தணன் தன் வாழ்கையை கழிக்கவேண்டும் .அதே மாதிரி ஷக்திரியன் ,வைஷ்யன்,மற்றவர்களும் தம் தர்மப்படி சத்யப்படி நேர்மையாக முறைப்படி பெறப்பட்ட சுத்தமான பொருளைக்கொண்டு தன் வாழ்க்கையை நடத்தவேண்டும் ...அடியேன் நரசிம்ஹ தாசன் .
Working...
X