Announcement

Collapse
No announcement yet.

கஷ்டங்களை வெளியில் சொல்லுங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கஷ்டங்களை வெளியில் சொல்லுங்கள்

    * பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.


    * நம் நாட்டில் முற்காலத்தில் கல்வியின் முதல் நோக்கம் அமைதியை அடைவதே ஆகும். ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் 'பரவித்யை' எனவும், மற்றவற்றை 'அபரவித்யை' எனவும் கூறுவர்.

    * பாவத்திற்கு மூலம் கெட்ட காரியம். கெட்ட செயலுக்கு மூலம் ஆசை. ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.

    * கடவுள் ஒன்று என்று சொல்வதோடு மற்ற மதங்கள் இருந்துவிடுகின்றன. ஆனால், இந்துமதமோ ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு வழிபட பலப்பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது.

    * தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்.

    * அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படியே ஓர் ஆசை பூர்த்தியானவுடன் இன்னொரு ஆசை மூள்கிறது.

    * கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.

    * தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத்தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைந்திருப்பது எது? வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது உண்மையாகும்.
    காஞ்சிபெரியவாள.
Working...
X