Announcement

Collapse
No announcement yet.

பெருமாள் கோவில்கள் - திரு அன்பில்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெருமாள் கோவில்கள் - திரு அன்பில்


    திருவடிவழகிய நம்பியாகிய எம்பெருமான் திரு அன்பில் என்ற இத்திருத்தலத்தில் திருச்சி அருகே எழுந்தருளியுர்.

    அமைந்துள்ள இடம்: -
    திருச்சி - கல்லணை வழியாக கும்பகோணம் பேருந்து வழியில் அமைந்துள்ளது. லால்குடிக்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. நடராஜபுரம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்து 3/4 கி.மீ. தொலைவில் உள்ள அன்பில் ஊரை அடையலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லை. திருச்சியிலிருந்து கொண்டு பெருமானைத் தரிசித்து விட்டு வரலாம்.

    மூலவர்: -
    வடிவழகிய நம்பி. கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.

    தாயார்: -
    அழகியவல்லி நாச்சியார்.

    உத்ஸவர்: -
    சுந்தரராஜப் பெருமாள்.

    தீர்த்தம்: -
    மண்டூக புஷ்கரிணி, கொள்ளிடம்.

    விமானம்: -
    தாரக விமானம்.

    சிறப்பு: -
    பழைய காலக் கல்வெட்
    மங்களாசாஸனம்: -
    திருமங்கையாழ்வார் தமது ஒரு பாசுரத்தால் (2417) மங்களா சாஸனம் செய்துள்ளார்.

    "நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
    நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
    தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
    அணைப்பார் கருத்தனா வான்" - நான்முகன் திருவந்தாதி
Working...
X