Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 237 - பெரியாழ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 237 - பெரியாழ்

    கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
    முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணா ஓஓ என்று
    இண்டைச் சடைமுடி ஈசன் இரக் கொள்ள
    மண்டை நிறைத்தானே! அச்சோ அச்சோ
    மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ.
    பொருள்: "கார்மேக வண்ணா! காண்கின்ற கடலும், மலையும், உலகம் ஏழும் சேர்ந்தும் கூட என் கையில் உள்ள கபாலத்தை நிரப்ப போதவில்லையே!' என்று சடைமுடி தரித்த சிவன் பிச்சை கேட்க, அக்கபாலத்தை நிரம்பச் செய்தவனே! மார்பில் ஸ்ரீவத்சம் என்னும் மருவினைத் தாங்கியவனே! என்னை அணைத்துக் கொள்வாயாக.
Working...
X