கேள்வி-பதில் : ஓர் விளக்கமும்,விண்ணப்பமும்..
அடியேன் சில நாட்களாக பிரஹ்மஸ்ரீ.சர்மா சாஸ்த்ரிகளால் தொகுத்த கேள்வி-பதில் நூலிலிருந்து தேர்நதெடுப்பட்ட கேள்வி பதில்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டு வருகிறேன் .நமது தர்மத்தையும் பண்பாட்டையும் பற்றி நாம் எவ் வளவோ தெரிந்து கொள்ள வேண்டிஉள்ளது. அதே மாதிரித்தான் வைதீக கர்மாக்கள் பற்றியும். பல விஷயங்களில் நமக்கு சில சந்தேகங்கள் வரத்தான் செய்கிறது..சில அடிப்படை விஷயங்களை குடும்பத்தில் அனுஷ்டிக்கவேண்டுமென்றால் ஆண்கள் மட்டும் முடிவு செய்யாமல் குடும்ப பெண்களும் ஒத்துழைத்தால்தான் நடக்கும். சில கூட்டங்களில் க்ருஹஸ்தர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தவைகளையும் ,பதில்களையும் இணைத்து தயாரித்த நூலிலிருந்து மேற்படி கேள்வி பதில்களை உங்கள் முன் சமர்ப்பித்துக்கொண்டு வருகிறேன்.இந்த தொகுப்பு ஓர் தர்ம சாஸ்த்திரம் அல்ல. சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் நமக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் சிறு பதில்கள்தான். இதில் கூறப்பட பதில்களுக்கு மாற்று கருத்து இருக்குமேயானால் உங்கள் கருத்து படியோ,உங்கள் பெரியோர்கள் சொல்படியோ ,இல்லத்து வாத்தியார்/சாஸ்த்ரிகள் வழிகாட்டுதல் படியோ நடந்து கொள்ள வேண்டுகிறேன்.
குருவருளும்,திருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பனமஸ்து.....நரசிம்ஹன்
Bookmarks