Announcement

Collapse
No announcement yet.

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் 258 - பெரியா&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் 258 - பெரியா&#

    வெண்டளையால் வந்த தரவு கொச்சகக் கலிப்பாவல் ஆள் இலங்கை மலங்கச் சரம் துரந்த
    வில் ஆளனை விட்டு சித்தன் விரித்த
    சொல் ஆர்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும்
    வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே.
    பொருள்: வலிமை மிக்க படைபலம் கொண்ட இலங்கை வேந்தன் அழியும்படி அம்பு தொடுத்த வில்லேந்தும் ராமனாகப் பிறந்தவன் திருமால். அவரே கண்ணனாகவும் பிறந்தார். கண்ணனைப் போற்றும் இந்த அப்பூச்சிப் பாடல்கள் பத்தையும் படித்தவர்கள் விண்ணுலகம் சென்று வைகுந்தத்தில் வாழும் பேறு பெறுவர்.
    குறிப்பு: குழந்தைகள் தாடி, மீசை வைத்துக் கொண்டு பெரியவர்களை பயமுறுத்தும் விளையாட்டே அப்பூச்சி காட்டுதல்.





Working...
X