Announcement

Collapse
No announcement yet.

இதுவல்லவோ குருபக்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இதுவல்லவோ குருபக்தி

    காஞ்சி மகாப்பெரியவருக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள் காசிக்கண்ணன், வைத்தியநாதன் என்ற தொண்டர்கள். இருவரும் பெரியவர் மீது அளவற்ற பக்தி கொண்டவர்கள். ஒருசமயம் மகாப்பெரியவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருந்தார். அப்போது, ஒரு ஊழியர் ஓடிவந்து, ""பெரியவா! கண்ணன், வைத்தா (வைத்தியநாதனை இப்படி சுருக்கிச்சொல்வார் பெரியவர்) இருவருமே உங்களிடம் பக்தி செலுத்துகிறார்கள், இவர்களது பக்தியில் ஏதாவது வித்தியாசம் காண்கிறீர்களா?'' என்றார்.
    பெரியவர் சிறிது யோசித்தார்.
    ""காசிக்கண்ணனிடம் நீ போய், பெரியவர் உன்னைக் கிணற்றில் குதிக்கச்சொன்னார் என்று சொன்னால், அவன்"பெரியவாளா சொன்னா! எதற்குச் சொன்னார், காரணமில்லாமல் அவர் ஏதும் சொல்லமாட்டாரே! சரி, பெரியவரிடமே கேட்டுவிட்டு பின் குதிக்கிறேன்' என்று சொல்வான். வைத்தாவோ, "பெரியவா சொன்னாளா! என்னையா!' என்று கனஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, உடன் கிணற்றில் குதித்து விடுவான். இதுதான் வித்தியாசம். இருவருமே என்னைப் பொறுத்தவரை சமமானவர்கள் தான். காசிக்கண்ணன் யோஜனையுடன் செய்வான். வைத்தா யோசிக்காமல் செய்வான். கைங்கர்யத்தில் இருவரும் சமமே!'' என்று பதிலளித்தார்.
Working...
X