Announcement

Collapse
No announcement yet.

நல்லவற்றைக் காண்போம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நல்லவற்றைக் காண்போம்

    * பெற்றோருக்கு மதிப்பளியுங்கள். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் பெற்றோராகும்போது பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள்.
    * பெற்றோரை மனிதர்களாக மட்டுமல்லாது, நடமாடும் தெய்வங்களாகவும் மதித்து நடக்க வேண்டும்.
    * உடல் படகு போன்றது. வாழ்வோ ஓடும் ஆறு போன்றது. ஆற்றைக் கடந்து அக்கரை சேரும் வரை படகு ஓட்டையாகி விடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
    * நல்லவற்றைக் காண்பதே கண்களின் பணியாக இருக்கட்டும். நல்லதைக் கேட்பதே காதுகளின் செயலாக இருக்கட்டும்.
    * உங்களிடமுள்ள குற்றங்களைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் உள்ள குணங்களை தேடிப் பாராட்டி மகிழுங்கள்.
    * உண்மையும், பொய்யும் கலந்த கலவையாக உலகம் இருக்கிறது. எப்போதும் சிந்தித்து செயலாற்றி உண்மையின் பக்கம் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
Working...
X