Announcement

Collapse
No announcement yet.

வேத மத ம் – Part 4

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேத மத ம் – Part 4

    Veda Madham


    வேத மத ம் – Part 4


    இதிலே கவனிக்க வேண்டிய விஷயம், ஈச்வரனைக்கூட வேதத்தை உண்டாக்கினவர் என்று சொல்கிற வழக்கமில்லை. நம்முடைய ச்வாஸத்தை நாம் உண்டாக்கினதாகச் சொன்னால் தப்புத்தானே?நாம் எப்போதிலிருந்து இருக்கிறோமோ அப்போதிலிருந்து ச்வாஸமும் இருக்கத்தானே செய்கிறது?இப்படியே தான் ஈச்வரனும் வேதமும். அவரும் அதைப் பண்ணினார் என்று சொல்ல முடியாது.

    வேதங்களுக்கு பாஷ்யம் (விரிவுரை) எழுதிய வித்யாரண்ய ஸ்வாமிகள், தம் குருவையே ஈச்வரனாக பாவித்து ஸ்தோத்திரம் பண்ணும்போது,

    யஸ்ய : ச்வஸிதம் வேதா :

    என்கிறார். 'எவருக்கு வேதங்கள்தான் சுவாஸமோ' என்று அர்த்தம். உபநிஷத்தில் போட்ட அதே 'நிச்வஸிதம்' இங்கே வந்திருக்கிறது. வேதத்தைப் பண்ணினார் என்று இங்கேயும் இல்லை.

    பகவானும் கீதையில் சொல்கிறபோது "நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன் (வேதைச்ச ஸர்வை:அஹம் ஏவ வேத்ய " என்று சொல்லிவிட்டு தன்னை "வேத க்ருத்" (அதாவது வேதத்தை பண்ணினவன்) என்று சொல்லிக் கொள்ளாமல், "வேதாந்த க்ருத்"என்றே சொல்லிக் கொள்கிறார். தன்னை வேதம் அறிந்தவனாக (வேதவித்) சொல்லிக் கொள்கிறாரே அன்றி "வேத க்ருத்"என்று சொல்லவில்லை. வேதாந்தம் என்கிற தத்வ ரூபத்தில் இந்த வேதங்கள் ஈச்வரனோடு ஈச்வரனாக அவனது மூச்சாக இருந்திருக்கின்றன.

    கீதையில் சொன்ன மாதிரியே பாகவதத்திலும் வேதங்களை பகவான் பண்ணினதாகச் சொல்லவில்லை. அவனுடைய ஹ்ருதயத்தில் வேதங்கள் ஸ்புரித்ததாகத் தான் சொல்லியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள ஒரு ஸத்தியம் நமக்குள் தானாகப் பளீரென்று வெளியிடப்படுவதுதா& #2985;் ஸ்புரணம் என்பது. இல்லாத ஒன்றைப் புதிதாகப் பண்ணினால் அதை "ஸ்புரித்தது" என்று சொல்ல முடியாது. 'ஸகல மந்திரங்களையும் கண்டுகொண்ட ஆதரிஷி பிரம்மா. அவருக்குப் பரமாத்மாதான் இவற்றைக் காண்பித்துக் கொடுத்தார். எப்படி? வாயினால் சொல்லி உபதேசம் பண்ணினாரா? இல்லை, ஹ்ருதயத்தினால் வேதங்களைக் கொடுத்தார். - "தேனே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதி கவயே" என்று பாகவதத்தின் முதல் ச்லோகம் சொல்கிறது. அதனால் பரமாத்மாவின் ஹருதயத்தில் எப்போதுமே வேதம் இருந்து கொண்டிருக்கிறது, அதை அவர் இயற்றவில்லை என்று தெரிகிறது. அவர் சங்கல்பம் பண்ணன மாத்திரத்தில் பிரம்மாவுக்கு அத்தனை வேதங்களும் தெரிந்துவிட்டன. அந்த சப்தங்களை வைத்துக் கொண்டு அவர் ஸ்ருஷ்டி பண்ண ஆரம்பித்து விட்டார்.

    தேவாரம் ஈச்வரனை "வேதியா, வேதகீதா" என்கிறது. "சந்தோக ஸாமம் ஒதும் வாயானை" "பௌழியின் காண்"என்று வேதசாகைகளின் (வேதக் கிளைகளின்) பெயர்களைச் சொல்லி, அவற்றை பகவான் பாடிக் கொண்டிருக்கிறான் என்கிறது. பாடுகிறான் என்றால் என்ன? மூச்சு விடுவதே பெரிய பாட்டுத்தான். நாம் விடுகிற மூச்சை "ஹம்ஸ் கீதம்" என்று சொல்லியிருக்கிறது. இப்படி ஈச்வரனுடைய ச்வாஸ ஸங்கீதமாக இருப்பதுதான் வேதம் ஈச்வரன் பூணூல் போட்டுக் கொண்டு, விபூதி இட்டுக் கொண்டு, ஒயாமல் ஸ்நானம் பண்ணிக் கொண்டு, வேதத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்று தேவாரம் சொல்வதைப் பார்த்தால், பரமசிவன்தான் பெரிய கனபாடிகள் என்று தோன்றுகிறது! "பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்", "வெண்ணூல் உண்டே, ஒதுவதும் வேதம்" என்றெல்லாம் அப்பர் ஸ்வாமிகள் வர்ணிக்கிறார்! இங்கேயும், "வேதம் ஒதுகிறார்", "வேதம் இசைக்கிறார்", என்றுதான் இருக்கிறதே தவிர, வேதத்தை இயற்றுகிறான் என்று ஒரிடத்தில்கூட இல்லை.

    வேதங்களைப் பற்றியும், வைதிகமான யாக, யக்ஞாதிகளைப் பற்றியும் தேவாரத்தைப் போலவே வைஷ்ணவர்களின் திவ்யப் பிரபந்தங்களிலும் நிறையச் சொல்லியிருந்தாலும& #3021;, எதனாலோ பெருமாள் வேதம் ஒதுவதாக எங்கும் சொல்லியிருக்கிறதா& #2965; எனக்கு நினைவில்லை.

    புகழேந்தி புலவர், கஜேந்திர மோக்ஷத்தின் போது யானை 'ஆதிமூலமே'என்று அழைத்தவுடன் 'என்ன?'என்று கேட்டு வந்த மஹாவிஷ்ணுவை,

    வேதத்தின் முன் நின்றான் ;
    வேழம் முதலே என அழைப்ப
    என் என்றான் எங்கட்கிறை

    என்று சொல்கிறார். இங்கே "வேதத்தின் முன்" என்றதால், "காலத்திலே வேதத்துக்கு முந்தி", என்று அவர் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. ஒருவர் வீட்டு வாசலில் நின்றால் "வீட்டின் முன் நின்றான்"என்றுதானே சொல்வோம்?அப்படிச் சகல வேதங்களுக்கும் ஆரம்பத்தில் அவன் இருக்கிறான் என்பதையே "வேதத்தின் முன் நின்றான்" என்று சொல்லியிருப்பார். இன்னொன்று தோன்றுகிறது. பெருமாள் புறப்பாடு எப்படி நடக்கிறது? முதலில் திருவாய்மொழி கோஷ்டிக்காரர்கள் வருகிறார்கள். அப்புறம் பெருமாள் (உத்ஸவர்) வருகிறார். அவருக்குப் பின்னால் வேத பாராயணக்காரர்கள் வருகிறார்கள். இங்கேயும் ஸ்வாமி வேதத்தின் முன்னே நிற்கிறார்.

    வைஷ்ணவமான ஆகமங்களின்படியும், புராணங்களின் படியும் மஹாவிஷ்ணுவையே விசேஷமாக யக்ஞ ஸ்வரூபி, வேதஸ்வரூபி என்று சொல்லியிருக்கிறது; கருடனை வேத ஸ்வரூபம் என்றும், அதன்மேல் பகவான் இருப்பதாகவும் சொல்கிறதும் உண்டு. ஆனால் வேதத்தைப் படைத்ததாகச் சொன்னதாகத் தெரியவில்லை.

    வேதத்திலேயே இருக்கப்பட்ட 'புருஷ ஸ¨க்தம்' ஒன்றில் தான் வேதங்கள் பிறந்தன (அஜாயத) என்ற வார்த்தையே வந்திருக்கிறது. ஆனால் 'புருஷ ஸ¨க்த'மானது ரொம்பவும் symbol வீநீணீறீ-ஆகவும், allegorical - ஆகவும் (உருவக அணி கொண்டதாகவும், ஆழ்ந்த உள்ளுறைபொருளை சம்பவம் போல் சொல்லுவதாகவும்) இருப்பதால், அதிலே "வேதம் பிறந்தது"என்று சொல்லுவதை அப்படியே நேர் அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. பரம புருஷனையே பசுவாக புலி கொடுத்த ஒரு யக்ஞத்தில்தான் ஸ்ருஷ்டியெல்லாம் உண்டாயிற்று என்று சொல்லி, அப்போதுதான் வேதங்களும் உண்டானதாக அதில் சொல்லியிருக்கிறது. பரமபுருஷனை யக்ஞ பசுவாகப் பலி கொடுப்பது என்றால் என்ன? அதை நேர் அர்த்தம் பண்ணிக் கொண்டால் சரியாகாது அல்லவா? இந்த யாகத்திலே வஸந்த காலத்தை நெய்க்கு பதில் ஆஹதியாக விட்டார்கள், கோடைக்காலம் ஸமித்துக் கட்டாயிற்று, சரத்காலம் ஹவிஸ் ஆயிற்று என்றெல்லாம் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? இதெல்லாம் மந்திர அர்த்த்தத்தைத் தியானம் பண்ணி, அதிலேயே ஊறினவர்களுக்குத்த& #3006;ன் அநுபவ ரூபத்தில் அர்த்தமாகும். நாம் வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் வேதங்கள் பிறந்ததாக அதில் சொன்னதையும் அப்படியே பொருள் கொள்வதிற்கில்லை.
    மொத்தத்தில் சாஸ்திர அபிப்ராயம், வேதம் அநாதி;அது அநாதியாக ஈச்வரனின் சுவாஸமாக இருக்கிறது என்பதுதான். ஈச்வரனின் சுவாஸம் இந்த மாதிரி சப்த ரூபத்தில் இருக்கிறது என்றால், இந்த சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா சிருஷ்டி பண்ணினார் என்றால், நாகரிக மூளைக்கு "இதெல்லாம் சுத்த நான்-சென்ஸ்"என்று தோன்றுகிறது.

    நன்றாக ஆராய்ந்து பார்த்தால், பெரிய விஞ்ஞான உண்மையே இதில் இருக்கிறதென்று தெரிகிறது. இப்படிச் சொல்லும்போது இன்றைய விஞ்ஞானத்துக்கு acceptable- ஆக (ஏற்புடைத்தாக) இருந்தால்தான் மத விஷயங்களை நாம் ஒப்புக் கொள்ளலாம் என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. நம் ஸயன்ஸும், ஸயண்டிஸ்டுகளும் எங்கே போக முடியாதோ அந்தப் பரமாத்ம தத்துவத்தைச் சொல்கிற வேதத்தை, ஸயன்ஸின் லிமிட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதிலுள்ள அநேக விஷயங்கள் ஸயன்ஸுக்கு ஒத்துவராமல்கூட இருப்பதாகத் தோன்றலாம். அதனால் அவை தப்பு என்று ஆகிவிடாது. ஆனால் இங்கே எடுத்துக் கொண்ட விஷயம் - மூச்சு எப்படி சப்தகோவைகளான மந்திரமாக இருக்க முடியும், அதை வைத்துக் கொண்டு எப்படி லோக ஸ்ருஷ்டி உண்டாக முடியும் என்ற விஷயம் - ஸயன்ஸுக்கும் ஒவ்வியதாகவே இருக்கிறது என்று மட்டும் சொன்னேன்.

    Source:subadra
Working...
X