Announcement

Collapse
No announcement yet.

ஔவையார்./தொடர்ச்சி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஔவையார்./தொடர்ச்சி

    தொடர்ச்சி ---3

    மூதுரைகடவுள் வாழ்த்தவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
    துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
    தப்பாமல் சார்வார் தமக்கு
    நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
    என்று தருங்கோல் என வேண்டா - நின்று
    தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
    தலையாலே தான்தருத லால். 1
    நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
    கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
    ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
    நீர் மேல் எழுத்துக்கு நேர் 2
    இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
    இன்னா அளவில் இனியவும்-இன்னாத
    நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
    ஆளில்லா மங்கைக் கழகு 3
    அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
    நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
    சுட்டாலும் வெண்மை தரும் 4
    அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
    பருவத்தால் அன்றிப் பழா 5
    உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
    பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
    பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
    தளர்ந்து வளையுமோ தான் 6
    நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
    நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
    தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
    குலத்து அளவே ஆகுமாம் குணம் 7

    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்று 8
    தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
    தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
    குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
    இணங்கி இருப்பதுவும் தீது. 9
    நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை. 10
    பண்டு முளைப்பது அ¡¢சியே ஆனாலும்
    விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
    ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
    ஏற்ற கருமம் செயல். 11
    மடல் பொ¢து தாழை ( மகிழ் இனிது கந்தம்
    உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பொ¢து
    மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
    உண்ணீரும் ஆகி விடும் 12
    கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
    நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    மாட்டாதவன் நன்மரம் 13
    கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
    பொல்லாச் சிறகைவி¡¢த்(து) ஆடினால் போலுமே
    கல்லாதான் கற்ற கவி 14
    வேங்கை வா¢ப்புலிநோய் தீர்த்த விடகா¡¢
    ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
    புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
    கல்லின்மேல் இட்ட கலம் 15
    அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
    கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
    ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
    வாடி இருக்குமாம் கொக்கு 16

    அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
    கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
    ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
    வாடி இருக்குமாம் கொக்கு 16
    அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
    உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
    கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி உறுவார் உறவு 17

    சீ¡¢யர் கெட்டாலும் சீ¡¢யரே; சீ¡¢யர் மற்(று)
    அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீ¡¢ய
    பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
    மண்ணின் குடம் உடைந்தக் கால் 18
    ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
    நாழி முகவாது நால்நாழி - தோழி
    நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
    விதியின் பயனே பயன். 19
    உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
    உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
    மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
    அம்மருந்து போல்வாரும் உண்டு 20
    இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
    இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
    வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
    புலிகிடந்த தூறாய் விடும் 21
    எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
    கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
    கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
    முற்பவத்தில் செய்த வினை. 22
    கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
    பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
    நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
    சீர்ஒழுகு சான்றோர் சினம் 23

    நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
    கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
    மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
    காக்கை உகக்கும் பிணம் 24
    நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
    அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
    கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
    கரவிலா நெஞ்சத் தவர். 25
    மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
    தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
    சென்றஇடம் எல்லாம் சிறப்பு 26
    கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
    அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
    வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
    இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27
    சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
    கந்தம் குறைபடா (து ஆதலால் - தம்தம்
    தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
    மனம்சிறியர் ஆவரோ மற்று. 28 மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
    உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
    ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பி¡¢ந்து
    போம்போ(து) அவளோடு (ம்) போம் 29
    சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
    ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
    குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
    மறைக்குமாம் கண்டீர் மரம். 30

    www.freewebs.com/thirugnanam/auvaiyar.htm

  • #2
    Re: ஔவையார்./தொடர்ச்சி

    ஶ்ரீ
    தஙகளது போஸ்டு முடியுமுன் பதில் அளிக்க வேண்டாமெனக்காத்திருந்தேன் என்னை பள்ளிப் பருவத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள் அப்போது புரியாதவை இப்போது புரிகிறது இருப்பினும் சில இடங்களில் தமிழாசான் தேவைப்பகடுகிறார் காரணம் அக்கால தமிழ்ப்பதங்கள் மிக்க நன்றி

    Comment

    Working...
    X