தேவையானவை:
கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2
செய்முறை:
அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
சோடா உப்பு போடவும்
நன்கு அரைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.
குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks