கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என்றால் என்ன?
"கிருஷ்ண' என்றால் கருப்பு. இது இருளைக் குறிக்கும். "சுக்ல' என்றால் வெண்மை. ஒளியைக் குறிக்கும். அமாவாசையின் மறுநாள் துவங்கி பிறைநிலா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒளிவீசும். பவுர்ணமியன்று முழுநிலவாக பிரகாசிக்கும். இரவில் வெண்மையாக ஒளிவீசும் வளர்பிறை நாட்களுக்கு "சுக்லபட்சம்' என்ற பெயர். "பட்சம்' என்றால் பதினைந்து நாட்கள். பவுர்ணமியின் மறுநாள் தேய்பிறை தொடங்கி இரவில் இருள் சூழ்ந்து வருவதால் அமாவாசை வரையிலான பதினைந்து நாட்களுக்கு "கிருஷ்ணபட்சம்' என்று பெயர்.
Source: DINAMALAR
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks