Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கக் கலம்பகம் 28

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கக் கலம்பகம் 28

    28 : மறப்பேனோ ?




    இருளினும் , வெளியினும் (இரவிலும் பகலிலும் )
    மருளினும் , தெருளினும் (மயக்கத்திலும்,தெளிவிலும்)
    இன்பமே அடையினும்

    துன்பமே மிடையினும் (மிடை - மிகுதல்)
    ஒருவர் முன்பு புகழினும்
    இருவர் பின்பு இகழினும்
    ஊன் இறந்து அழியினும்
    யான் மறந்து அழிவனோ ?
    சுருதி நின்று ஓலிடும் (வேதங்கள் புகழும்)
    கரதலம் நாலொடும்
    துவளும் நூல் மார்பமும் (நூல் - முப்புரி நூல்)
    பவள வாய் மூரலும் (மூரல் - முறுவல்)
    திரு அரங்கேசர் தம்
    சுருள் கருங்கேசமும்
    செய்ய நீள் முடியும் (செய்ய -அழகிய)
    அத்துய்ய சேவடியுமே ! (துய்ய - தூய)


  • #2
    Re: திருவரங்கக் கலம்பகம் 28

    அருமை அருமை மிக அருமை அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கும் அர்த்தத்திற்கு மிக்க நன்றி

    Comment

    Working...
    X