Announcement

Collapse
No announcement yet.

periyava

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • periyava

    ஒரு நாள் ரா. கணபதி [தெய்வத்தின் குரல் என்ற நூலில் பெரியவா
    சொன்ன விஷயங்களைத் தொகுத்து அளித்தவர்} என்பவரிடம்,


    “என்னை ஏன் எல்லாரும்” பெரியாவா”ன்னு சொல்றா?
    எனக்கு ப் பெரிய வாயா இருக்கு?
    இல்லைனா, வரவாகிட்டே ஓயாமல் பேசறேனே…அதனால்
    ஓட்டைவாய் என்று இப்படிப் பேர் வெச்சுட்டாளா?”


    என்று கேட்டாராம்.


    அதற்கு கணபதி,
    “ஆமாம்…இருப்பதிலேயே மகாவாக்கியத்தை உபதேசிக்கும் வாய்
    பெரியவாளுக்கு இல்லையா…அதனால் “பெரிய வாய்”என்றார்.


    “சிலர் ‘பெரியவாள்’னு சொல்றாளே! அதுக்கு அர்த்தம் என்ன?
    வாள் போல அறுக்கிறேன்,ஃபோர் அடிக்கிறேன் என்பதா?”
    என்று கேட்டாராம்.


    “ஆமாம் நீங்க பெரியவாள்தான். இந்த வாள்,தங்களிடம் வரும்
    பக்தர்களின் காமம்,குரோதம்,கோபம்,மோகம்,மதம்,மாச்சரியம்
    என்ற எல்லாக் குற்றங்களையும்,’அறுத்துத் தள்ளுகிறதே.
    அதான் “பெரிய வாள்” என்கிறார்கள்!” என்றார் கணபதி.



Working...
X