Announcement

Collapse
No announcement yet.

PADUKA SAHASRAM 138 தேசிகன் சொல்லும் குட்டி கதை !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • PADUKA SAHASRAM 138 தேசிகன் சொல்லும் குட்டி கதை !

    पादुका सहस्रं 138 தேசிகன் சொல்லும் குட்டி கதை !
    ஒரு காட்டில் ஒரு சிங்கம் தன் மனைவி மற்றும் குட்டியுடன் வாழ்ந்து வந்தது. அங்கு ஒரு யானை மதம் கொண்டு திரிந்தது . அதைக் கொல்ல முடிவெடுத்த ஆண் சிங்கம் ,தனது குஹையை விட்டு வெளியே வந்தது . பெண் சிங்கம் தன் குட்டியை பத்திரமாக அழைத்துக் கொண்டு குஹைக்குள் திரும்பிச் சென்றது .
    1 2 3 4 5
    दशग्रीव स्तंबेरम दळन दुर्दान्त हृदये
    6 7 8 9
    विहारस्वाच्छन्द्यात् विशति रघुसिम्हे वनभुव म्
    10 11 12 13 14 15
    स्व वात्सल्य क्रोडीकृत भरत शाबेव भवती
    16 17 18 19 20
    निराबाधां पादावानि न विजहौ कोशल गुहाम्

    17 पादवानि ஹே பாதுகையே
    1 दशग्रीव ராவணனான
    2 स्तंबेरम யானையை
    3 दळन பிளக்கிறதில்
    4 दुर्दान्त வெறி கொண்ட
    5 हृदये மனதுடன்
    8 रघुसिम्हे ராமனான சிங்கம்
    6 विहारस्वाच्छन्द्यात् தன் இஷ்டப்படி விளையாட
    9 वनभुवम् காட்டிற்கு
    7 विशति சென்ற போது
    15 भवती நீ
    10 स्व உன்னுடைய
    11 वात्सल्य கருணையால்
    12 क्रोडीकृत எடுத்துக் கொள்ளப்பட்ட
    13 भरत பரதன் ஆன
    14 शाबेव கு ட்டியுடன்
    16 निराबाधां கஷ்டம் இல்லாத
    19 कोशल கோசல தேசம் ஆன
    20 गुहाम् குஹையை
    18 न विजहौ அடைந்தாய் !

    Last edited by sridharv1946; 25-05-13, 14:20.
Working...
X