திருவரங்கத்தந்தாதி 12 மதிக்கவலை தீர் மாதவா !
மதிக்கவலைப்பட்டவெண்டயிர்போலமறுகுறுமென்
மதிக்கவலைப்புண்டணிகின்றிலேன்மண்ணும்வானகமு
மதிக்கவலைபுனல்சூழரங்காநின்மனத்தருடா
மதிக்கவலைப்புன்பிறப்பினிமேலும்வருங்கொலென்றே
பதவுரை :
மண்ணும் மண்ணுலகத்தாரும்
வானகமும் விண்ணுலகத்தாரும்
மதிக்க கொண்டாடும்படி
அலைபுனல்சூழ் அலைகளுடைய காவேரி சூழ்ந்த
அரங்கா ரங்க நாதா !
நின் மனத்து அருள் உன் மனத்திலுள்ள கருணை
தாமதிக்க காலம் நீட்டித்தால்
வலை புல் பிறப்பு வலை போன்ற இழிவான ஜன்மம்
இனிமேலும் வருங்காலத்திலும்
வரும் கொல் என்று வந்து விடுமோ என்று
மதிக்க கடைதலால்
அலைப்பட்ட அலைக்கப்பட்ட
வெண்தயிர் போல வெண்மையான தயிர் போல
மறுகுறும் நிலை கொள்ளாது
என் மதி கவலை என் மனத்தின் கவலையாகிற
புண் தணிகிலேன் ரணம் ஆறவில்லை
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks