திருவரங்கத்தந்தாதி 14 மாலைக்கல்லார் மாலைக்கல்லார் !?
மாலைக்கல்லார மடவார் புண்ணாக்கையில்வாஞ்சைவைத்து
மாலைக்கல்லாரம் புலிககுநையாநிற்பர் மாய்விப்பதோர்
மாலைக்கல்லாரம்புயத்தாளில்வைக்குமதிலரங்க
மாலைக்கல்லாரஞ்சலியாரென்னேசில மானிடரே
பதவுரை :
சில மானிடர் சில மனிதர்கள்
மாலை கல்லாரம் செங்கழுநீர்மலர் மாலை சூடிய
மடவார் பெண்களின்
புண் ஆக்கையில் அசுத்தமான உடலில்
வாஞ்சை வைத்து ஆசை வைத்து
மாலைக்கு மாலைப்பொழுதிற்கும்
அல் ஆர் அம்புலிக்கு இரவில் ஒளிரும் நிலாவிற்கும்
நையா நிற்பர் வருந்தி நிற்பர் .
மாய்விப்பது அழியச்செய்யும்
ஓர் மாலைக் கல்லார் ஒரு காம மயக்கத்தை ஒழிக்கமாட்டார்கள்
அம்புயம் தாளில் தாமரை மலர் போன்ற திருவடிகளில்
வைக்கும் அடியார்களை சேர்த்துக்கொள்ளும்
மதில் அரங்கம் மதில்கள் சூழ்ந்த திரு அரங்கத்தில்
மாலை திருமாலை
கல்லார் துதிக்க மாட்டார்கள்
அஞ்சலியார் வணங்க மாட்டர்கள்
என்னே இது என்ன அறியாமை ?
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks