Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 18 அரங்கன் அடிகளுக்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 18 அரங்கன் அடிகளுக்கு

    திருவரங்கத்தந்தாதி 18 அரங்கன் அடிகளுக்கு அடைக்கலம் !

    அடைக்கலந்தாயத்தவர்போலுடலுறையைவரைவரையும்
    அடைக்கலந்தாயுலகங்க்கொண்டதாள்களுக்
    கண்டமுண்டால்
    அடைக்கலந்தாயரங்காவாயர்பாடியிலன்றுநெய்பால்
    அடைக்கலந்தாய்வைத்துவாய்நெரித்தூட்டவழுமையனே


    பதவுரை :


    அண்டம் அண்டகோளங்களை
    உண்டு உட்கொண்டு
    ஆல்அடை கலந்தாய் ஆலிலையில் சேர்ந்து பள்ளி கொண்டவனே !
    அரங்கா ரங்கநாதா !
    அன்று அக்காலத்தில்
    ஆயர்பாடியில் திரு ஆய்ப்பாடியில்
    நெய் நெய்யை
    பாலடை கலம் வைத்து பாலடைப் பாத்திரத்தில் எடுத்து வைத்து
    தாய் உன் தாய் யசோதை
    வாய் நெரித்து ஊட்ட உன் வாயை நெரித்துக் ஊட்டிவிட
    அழும் குழந்தை போல் அழுத
    ஐயனே இறைவனே !
    தாயத்தவர் போல் பங்காளிகள் போலே
    உடல் உறை உடம்போடு இருக்கிற
    ஐவரையும் ஐந்து இந்திரியங்களையும்
    அடைக்கலம் அடக்கி வைக்க முடியவில்லை
    தாய் உலகம் கொண்ட தாவி உலகங்களை அளந்த
    தாள்களுக்கு அடைக்கலம் திருவடிகளுக்கு அடைக்கலம் ஆகிறோம்


    Last edited by sridharv1946; 12-06-13, 14:55.
Working...
X