மஹாளபக்ஷம் - பலகாரம் - கோதுமை மாவு கூழ்
தேவையானவை :
கோதுமை மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
புளி தண்ணீர் 1 1 / 2 கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் முக்கால் கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை :
முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு பந்து போல சுருண்டு வாணலி இல் ஒட்டாமல் வரும்போது, எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி , வில்லைகளாக வெட்டவும்.
அவ்வளவுதான், சுவையான கோதுமை மாவு கூழ் தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்
குறிப்பு: வற்றல் மிளகாய்க்கு பதில் மோர் மிளகாய் இதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்![]()
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks