Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 28 அரங்கனே ஆதி மூலம் எ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 28 அரங்கனே ஆதி மூலம் எ

    திருவரங்கத்தந்தாதி 28 அரங்கனே ஆதி மூலம் என அம்பலமாக்கியது ஓர் ஆனை !

    அக்கரவம்புனைந்தாரயனாரிடையாயிருநால்
    அக்கரவம்புமலராள்கொழுநனரங்கன்செங்கோல்-
    அக்கரவம்புயன்றான்மூலமென்பதறிவித்திடான்
    அக்கரவம்புவிமேல்வேழமேவெளியாக்கியதே

    பதவுரை :

    இரு நால் அக்கரம் எட்டு அக்ஷரத்துக்கு உரியவனும் ,
    வம்பு மலராள் வாசனையுடைய மலரில் இருக்கும் திருமகளுடைய
    கொழுநன் கணவனும் ,

    செம் கோலம் சிவந்த அழகிய
    அம்புயன் கரம் தாமரை போன்ற கைகளை உடையவனுமான
    அரங்கன் ரங்க நாதன்
    அக்கு அரவம் எலும்பையும் பாம்புகளையும்
    புனைந்தார் ஆபரணமாக அணிந்த சிவனுக்கும்
    அயனாரிடை ஆய் பிரமனுக்கும் நடுவில் இருந்து கொண்டு
    தான் மூலம் என்பது தானே ஆதி மூலம் எனும் உண்மையை
    அறிவித்திடான் வெளிப்படுத்த வில்லை !
    அக் கரவு அவ்வாறு ஒளித்ததை
    அம் புவி மேல் அழகிய பூமியில்
    வேழமே கஜேந்திரன் என்ற ஒரு யானை
    வெளியாக்கியது பகிரங்கமாய் தெரிவித்தது .

    Last edited by sridharv1946; 20-06-13, 12:22.
Working...
X