Announcement

Collapse
No announcement yet.

திருவேங்கடத்தந்தாதி 33 அரங்கர்க்கு அடிமை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவேங்கடத்தந்தாதி 33 அரங்கர்க்கு அடிமை

    திருவேங்கடத்தந்தாதி 33 அரங்கர்க்கு அடிமைப் படார் இருந்தென் ? இராமலென் ?

    ஆவாகனத்தரடியார் மனத்துட்புள்ளானவொப்பில்-
    ஆவாகனத்தரரங்கர்பொற்றாளுக்கடிமைப்படார்
    ஆவாகனத்தவழுக்குடல்பேணியறிவிழந்தவ்-
    ஆவாகனத்தரிருந்தென்னிராமலென்னம்புவிக்கே

    பதவுரை :

    அடியார் மனத்துள் பக்தர்களுடைய மனத்தில்
    ஆவாகனத்தர் இருப்பவரும்
    புள்ஆன கருடப்பறவையாகிய
    ஒப்பிலா வாகனத்தார் ஒப்பற்ற வாகனத்தை உடையவருமாகிய
    அரங்கர் ரங்க நாதருடைய
    பொன் தாளூக்கு அழகிய திருவடிகளுக்கு
    அடிமைப்படார் அடிமை ஆகாத சிலர்
    ஆ ஆ அந்தோ !
    கனத்த பாரமாயுள்ள
    அழுக்கு உடல் பேணி அசுத்தமான உடம்பைப் பாதுகாத்துக்கொண்டு
    அறிவு இழந்து மதி கெட்டு
    அவா ஆகு சிற்றின்பத்தில் ஆசை கொண்டுள்ள
    அனத்தர் பயனற்ற அவர்கள்
    அம் புவிக்கு அழகிய இந்த பூமியில்
    இருந்து என் வாழ்வதால் என்ன பயன் ?
    இராமல் என் ஒழிந்தால் என்ன நஷ்டம் ?

    Last edited by sridharv1946; 22-06-13, 21:15.
Working...
X