Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 41 அரும்பாடு பட்டாலும

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 41 அரும்பாடு பட்டாலும

    திருவரங்கத்தந்தாதி 41 அரும்பாடு பட்டாலும் அரங்கனைக் கண்டு வாழுங்கள் !


    Click image for larger version

Name:	1006191_557489230958951_1006010847_n.jpg
Views:	1
Size:	114.6 KB
ID:	34771

    கலக்கூழைக்கைக்குங்கருத்துடையீரரங்ககத்துளிலைக்-
    கலக்கூழைக்கைக்குங்கறியிட்டுந்துய்த்திருங்காதுபடைக்-
    கலக்கூழைக்கைக்குள்வருவாணனைக்கண்ணுதலும்விட்ட-
    கலக்கூழைக்கைக்குப்பைகண்டானைவீதியிற்கண்டுவந்தே.

    பதவுரை :

    கலக்கு ஊழை கலங்கவைக்கும் ஊழ்வினையை
    கைக்கும் வெறுத்து ,ஒழிக்கவேண்டும் என்னும்
    கருத்து உடையீர் எண்ணம் உடையவர்களே !
    காது படைக்கலம் மோதவல்ல ஆயுதங்களை உடைய

    கூழை கைக்குள் படை வகுப்பின் ஒழுங்கினிடையே
    வரு வாணனை வந்த பாணாசுரனை
    கண்ணுதலும் அகல சிவபிரானும் கை விட்டு விலக ,
    கூழை கை குறைபட்ட கைகளின்
    குப்பை கண்டானை - குவியலைக் கண்டவனான ரங்கநாதனை
    அரங்கத்துள் ஸ்ரீரங்கத்தில்

    வீதியில் கண்டு வீதியில் பார்த்து
    உவந்து மனம் மகிழ்ந்து
    இலை கலம் இலைப்பாத்திரத்தில்
    கூழை கூழை
    கைக்கும் கறி இட்டு கசக்கின்ற கறிகளுடன் சேர்த்து
    துய்த்து சாப்பிட்டாவது
    இரும் வசித்திடுங்கள் !

    Last edited by sridharv1946; 29-06-13, 20:14.
Working...
X