திருவரங்கதந்தாதி 45 அரங்கனின் அன்பிருந்தால் அடுத்த பிறவி அண்டாது !
திருக்காவிரிக்கும்யமுனைக்குங்கங்கைக்குந்தெள்ளமுதாந்-
திருக்காவிரிக்குங்கடற்கும்பிரான்றென்னரங்கமென்னத்-
திருக்காவிரிக்குமொழியார்க்குத்தீமெழுகாவிரன்புய்த்-
திருக்காவிரிக்குமதெவ்வாறவனுங்கள் சென்மத்தையே.
பதவுரை : திரு + கா + விரிக்கும்
திரு + காவிரிக்கும்
திருக்கு +ஆவிர் +இக்கு(கரும்பு)
திரு கா விரிக்கும் அழகிய சோலைகளை செழித்து வளரச் செய்யும்
யமுனைக்கும் யமுனை நதிக்கும்
கங்கைக்கும் கங்கா நதிக்கும்
தெள் அமுது ஆம் தெளிவான அமிர்தம் போல் இனிய
திருக் காவிரிக்கும் மேன்மையான காவேரி நதிக்கும்
கடற்கும் சமுத்திரத்திற்கும்
பிரான் தலைவனுடைய
தென் அரங்கம் அழகிய திருவரங்கம்
என்ன என்று சொன்னால்
அன்பு உய்த்து இருக்கா அன்பு காட்டாமல்
திருக்கு ஆவீர் மாறுபடுவீர்கள்
இக்கு மொழியார்க்கு கரும்புச் சாறு போல் இனிமையாகப் பேசும் பெண்களிடம்
தீ மெழுகு ஆவீர் தீயில் இட்ட மெழுகு போல் உருகுவீர்கள்
அவன் அப்படியானால் அரங்கன்
உங்கள் சென்மத்தை உங்களுடைய பிறப்பை
இரிக்குமது எவ்வாறு ஒழிப்பான் ?
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks