Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 59 கண்ணன் மீது கரந்த க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 59 கண்ணன் மீது கரந்த க

    திருவரங்கத்தந்தாதி 59 கண்ணன் மீது கரந்த காதலை கன்னியரிடம் கூறேன் !
    மகரந்தகாதலைவாழ்வென்வாரிசுட்டாய்திதிதன்
    மகரந்தகாதலைவானிலுள்ளோர்க்குமண்ணோர்க்குவட்டா
    மகரந்தகாதலைவார்குழையாய்வளர்சீரங்கதா
    மகரந்தகாதலைவாக்கிற்சொல்லேன்மடவாரெதிரே

    பதவுரை :மகரம் + தகாது
    மகர் + அந்தகா
    மகரந்த + காது


    மகரம் சுறா மீன்களும்
    அலை வாழ்வு தகாது என்ன கடலில் வாழ்வது கூடாது என்று சொல்லும்படி
    வாரி சுட்டாய் கடலை எரிக்க ஆரம்பித்தவனே !
    திதி தன் மகர் அந்தகா திதியின் புதல்வர்களான அரக்கர்களுக்கு யமனான வனே !
    வானில் உள்ளோர்க்கு தலை தேவர்களுக்குத் தலைவனே !
    மண்ணோர்க்கு உவட்டா மகரந்த மனிதர்களுக்கு தெவிட்டாத தேனே !
    காத்து அலை வார் குழையாய் காதுகளில் ஆடும் குண்டலங்களை உடையவனே !
    வளர் சீரங்க தாம ஸ்ரீ ரங்கத்தில் உறங்குபவனே !
    கரந்த காதலை எனது அந்தரங்கமான பக்தியை
    மடவார் எதிரே பெண்களிடம்
    வாக்கில் சொல்லேன் என் வாயால் சொல்ல மாட்டேன் !
    Last edited by sridharv1946; 06-07-13, 19:57.
Working...
X