Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 65 அரங்கா ! நின் கண் ஆசை &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 65 அரங்கா ! நின் கண் ஆசை &

    திருவரங்கத்தந்தாதி 65 அரங்கா ! நின் கண் ஆசை தந்து என் ஆரிருளை அறு !

    அறுகுதலைப்பெய்பனிபோன்ற தாதுருவாய்ப்பிறந்தல்-
    அறுகுதலைப்பிள்ளையாய்க்காளையாய்க்கிழமாகியையள்-
    அறுகுதலைச்செய்துவீழ்காயநானென்னுமாரிருளை
    அறுகுதலைக்கொள்பணியரங்காநின்கணாசைதந்தே

    பதவுரை : அறுகு + தலை
    அலறு + குதலை
    அளறு + உகுதலை
    அறு + கு + தலை

    கு பூமியை
    தலைக்கொள் முடியின் மேல் சுமக்கின்ற
    பணி ஆதி சேஷனிடம் பள்ளி கொண்ட
    அரங்கா ரங்கா நாதா !
    அறுகு தலைப்பெய் அறுகம் புல்லின் நுனியில் விழும்
    பனி போன்ற பனி போல சிறிய
    தாது இந்திரியம்
    உரு ஆய மனித வடிவமாய் மாறி ,
    பிறந்து பிறந்து ,
    அலறு அழுது ,
    குதலை பிள்ளை ஆய் மழலை பேசும் குழந்தை ஆகி ,
    காளை ஆகி இளைஞன் ஆகி ,
    கிழம் ஆகி ( மூப்பு வந்து ) வயோதிகன் ஆகி ,
    ஐ அளறு உகுதலை செய்து (நோய் வந்து )கோழையைவெளியே துப்பி ,
    வீழ காயம் (மரணம் வந்து ) இறக்கும் உடம்பை
    நான் என்னும் தான் என்று நினைக்கும் ,
    ஆர் இருளை கொடிய மன இருளை
    அறு நீக்கு ;
    நின்கண் ஆசை தந்து உன்னிடம் பக்தி உண்டாக்கு !


    Last edited by sridharv1946; 09-07-13, 19:43.
Working...
X