இது ரொம்ப அருமையாக வரும். இது க்கு ஒரு போர்முலா இருக்கு அது தான் 1:2:3 அதாவது 1 கப் கோதுமை மாவு , 2 கப் அரிசி மாவு, 3 கப் பாம்பே ரவா எடுத்துக்கணும். அவ்வளவு தான் ரவா தோசை அருமையாக பட்டு பட்டாக வரும்![]()
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
இதில் தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை
கோதுமை மாவு ,அரிசி மாவு, பாம்பே ரவா எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
குறிப்பு :சாதரணமாக தோசை வார்க்கும் போது நடுவில் மாவை விட்டு விட்டு கல்லில் பரத்துவோம் இல்லையா? இதை அப்படி வார்க்க முடியாது. கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடனும். அது தானாகவே ஓடி நடுவரை வரும். அவ்வளவு தண்ணியாக மாவை கறக்கணும். அப்போத்தான் தோசை 'கண் கண்ணாக' வரும். நல்லா மொரு மொரு என்றும் வரும் . ஜாக்கிரதை![]()
Bookmarks