Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 74 அரங்கனின் அன்பனான &#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 74 அரங்கனின் அன்பனான &#

    திருவரங்கத்தந்தாதி 74 அரங்கனின் அன்பனான நான் ஆரணங்குகளின் அழகு
    கண்டு மருளேன் !

    கண்டலங்காரளகங்கெண்டைமேகங்கவிரிதழ்சொல்
    கண்டலங்காரமுலையிளநீரென்றுகன்னியர்சீர்
    கண்டலங்காரமருளேன்புனற்கயல்கொக்கென்றஞ்சக்-
    கண்டலங்காரமலரரங்கேசர்க்குக்காதலனே



    பதவுரை : கண் + தலம் + கார் + அளகம்
    ண்டு + அலங்கு + ஆரம்
    கண்டு + அலங்காரம்
    கண்டல் + அங்கு + ஆர


    புனல் கயல் நீரிலுள்ள மீன்கள்
    கொக்கு என்று அஞ்ச கொக்கோ என பயப்படும்படி
    கண்டல் தாழைகள்
    அங்கு அந்த நீரில்
    ஆர மலர் அதிகமாக மலர்ந்துள்ள
    அரங்க ஈசர்க்கு திருவரங்கத்துக்கு தலைவன் ஆன ரங்கநாதனுடைய
    காதலன் பக்தன் ஆன நான்
    கன்னியர் பெண்களுடைய
    கண்தலம் கண்களை
    கெண்டை கெண்டை மீன் என்றும் ,
    கார் அளகம் கரிய கூந்தலை
    மேகம் கரிய மேகம் என்றும் ,
    இதழ் அதரத்தை
    கவிர் முருக்க மலர் என்றும்
    சொல் பேச்சை
    கண்டு கற்கண்டு என்றும்
    அலங்கு ஆரம் முலை அசையும் மாலைகளை உடைய தனங்களை
    இளநீர் என்று இளநீர் என்றும்
    சீர் கண்டு சிறப்பை நினைத்து
    அலங்காரம் மருளேன் அவர்களது அழகைக் கண்டு மயங்க மாட்டேன் !

    Last edited by sridharv1946; 12-07-13, 18:43.
Working...
X