திருவரங்கத்தந்தாதி 84 முத்தர் ஆகும் வண்ணம் முகுந்தனை முன்னீர் !
ஆடுமுன்னீர்முதற்றீர்த்தத்தினாலருமாதவத்தால்
ஆடுமுன்னீர்மறைவேள்வியினாலண்டராயுடன்மாறு-
ஆடுமுன்னீரதுமாயையினாலென்றரங்கனைக்கொண்ட் -
ஆடுமுன்னீர்செய்தபாவமும்போய்முத்தராம்வண்ணமே
பதவுரை : ஆடும் + முந்நீர்
ஆடு + முன் + ஈர்
மாறாடும் + முன்னீர்
கொண்டாடும் + முன் + நீர்
ஆடும் முந்நீர் முதல் தீர்த்தத்தினால் நீராடும் கடல் முதலிய புண்ணிய தீர்த்தங்களாலும்
அரு மா தவத்தால் அரிய பெருந்தவத்தை செய்வதாலும்
ஆடு முன் ஈர் ஆடு முதலியவைகளை அறுக்கின்ற
மறை வேள்வியினால் வேதமுறைப்படி செய்யும் யாகங்களாலும்
அண்டர் ஆய் உடல் மாறாடும் தேவனாக உடல் மாறும்
அது அவ்வாறு மாறுவது
மாயையினால் திருமாலுடைய மாயையால்
என்று முன்னீர் என்று எண்ணுங்கள்
முன் நீர் செய்த பாவமும் போய் முற்பிறப்புகளில் நீர் செய்த பாவமும் போய்
முத்தர் ஆம் வண்ணம முக்தி பெற்றவர் ஆகும்படி
அரங்கனை கொண்டாடும் ரங்கநாதனைத் துதியுங்கள்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks