Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 86 மானால் மானை நீங்கிī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 86 மானால் மானை நீங்கிī

    திருவரங்கத்தந்தாதி 86 மானால் மானை நீங்கியது மாதவா உன் மாயமே !

    மானாகவருநிருதன்புன்மாயையின்மங்கையென்னு
    மானாகவருமணியைமுன்னீங்கினன்மாயனென்பார்
    மானாகவரும்பலர்சோலைசூழுமதிலரங்கா
    மானாகவருமமுதேயதுவுநின்மாயமன்றே

    பதவுரை :மான் + ஆக + வரும்
    மால் + நாக + அருமணியை
    மால் + நாக + அரும்பு
    மால் + நா + கவரும்

    மால் நாக பெரிய புன்னை மரத்தினது
    அரும்பு அலர் அரும்புகள் மலரும்
    சோலை சூழும் சோலைகள் சூழ்ந்த
    மதில் அரங்கா மதில்களை உடைய ஸ்ரீரங்கத்தில் இருப்பவனே !
    மால் நா கவரும் அமுதே அடியார்களது நாவில் நுகரப்படும் அமுதம் போன்றவனே !
    மாயன் ராம பிரான்
    மான் ஆக வரும் மான் வடிவில் வந்த
    நிருதன் புல் மாயையின் மாரீசனின் அற்ப மாயையால்
    மங்கை என்னும் தனது மனைவி ஆகிய
    மால் நாக அரு மணியை மயக்கும் பாம்பினுடைய மாணிக்கத்தை
    முன் நீங்கினான் என்பார் முன்பு பிரிந்தான் என்று சொல்வார்கள்
    அதுவும் நின் மாயம் அன்றே அவ்வாறு மயங்கியதும் உன் மாயை அன்றோ ?


Working...
X