திருவரங்கத்தந்தாதி 87 மாயாத வரத்தனை மாய்த்த வரதா ! மா யாதவா ! மாயா !
மாயாதவர்தலைவாவரங்கா வடமாமதுரை
மாயாதவரண்டர்வந்தடைந்தான்மழுவாளிபிர
மாயாதவர்செய்வர் முன்னூல்சென்னூல்கொண்டவண்ணமொப்ப
மாயாதவரத்தனைக்குடர்கொத்ததுன்வாணகமே
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பதவுரை : மா + யாதவர்
மாயா + தவர்
பிரமா + யாது + அவர்
மாயாத + வரத்தனை
மா யாதவர் தலைவா பெருமை உடைய யது குல தலைவனே !
அரங்கா ரங்கநாதனே !
வட மா மதுரை மாயா பெருமை உடைய மதுரையில் அவதரித்த மாயா !
தவர் அண்டர் வந்து அடைந்தால் முனிவர்களும் தேவர்களும் சரண் அடைந்தால்
மழுவாளி பிரமா சிவனும் பிரம்மாவும்
யாது அவர் செய்வர் என்ன செய்வார்கள் ?
உன் வாள் நகமே வாள் போன்ற கூரிய உன் நகங்களால்
முன்னூல் உனது வெண்மையான முப்புரி நூல்
செந்நூல் கொண்டது ஒப்ப சிவந்த நூலால் செய்தது போல்
மாயாத வரத்தனை அழியாத வரத்தைப் பெற்ற ஹிரண்யனுடைய
குடல் கோத்தது குடலை மாலையாக அணிந்தாய் !
Bookmarks