Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 95/100 அரங்கம் வழியாக வந்&a

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 95/100 அரங்கம் வழியாக வந்&a

    திருவரங்கத்தந்தாதி 95/100 அரங்கம் வழியாக வந்தாலும் அமரர் பதவி அமையும் !

    மானத்துவண்டலுழவோரெழுத்தின்வடிவுற்றசீர்
    மானத்துவண்டவினையானராயினுமால்வளர்வி-
    மானத்துவண்டலமாமரங்கம்வழியாவரினு-
    மானத்துவண்டமர்தாரண்டராம்பதம்வாய்க்குமங்கே

    பதவுரை : மா + நத்து + வண்டல்
    மான + துவண்ட

    விமானத்து + வள் + ம்
    மானத்து + வண்டு

    மா நத்து பெரிய நத்தை
    வண்டல் உழ சேற்றில் ஊர்ந்து செல்லும்போது
    ஓர் எழுத்தின் வடிவுற்ற சீர் மான ஒரு எழுத்தின் வடிவமாக அமைவது போல்
    துவண்ட வினையாளர் ஆயினும் வருந்தும்படி விதி உடையவர்களே ஆனாலும்
    மால் வளர் திருமால் சயனித்திருக்கும்
    விமானத்து வள் தலம் ஆம் விமானத்தை உடைய சிறந்த தலமான
    அரங்கம் வழியா வரினும் ஸ்ரீரங்கம் வழியாகச் சென்றாலும்
    அங்கே அப்படி வந்ததாலேயே
    மானத்து வண்டு அமர் பெருமை உடைய வண்டுகள் மொய்க்கும்
    தார் அண்டர் ஆம் மாலை தரிக்கும் முக்தர்கள் ஆகும்
    பதம் வாய்க்கும் பதவி கிடைக்கும்


    Last edited by sridharv1946; 19-07-13, 13:53.
Working...
X