Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி : சிறப்புப் பாயிர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி : சிறப்புப் பாயிர

    திரு வேங்கடத்து அந்தாதி : சிறப்புப் பாயிரம் - மணவாள தாசர் பாடல்கள் வைகுண்டம் சேர்க்கும் !

    இக்கரையந்திரத்துட்பட்டதென்னயிருவினையுள்
    புக்கரைமாநொடியுந்தரியாது உழல்புண்பிறப்பாம்
    எக்கரை நீக்கிப்படித்தாரையந்தயிருவிரசைக்கு
    அக்கரைசேர்க்கும்மணவாளதாசனருங்கவியே


    பதவுரை : இக்கு அரை யந்திரத்து
    புக்கு அரை மா நொடி
    எக்கரை
    அக்கரை


    மணவாளதாசன் அரும் கவியே அழகிய மணவாளதாசருடைய அருமையான பாடல்கள்
    படித்தாரை அதனைபடித்தவர்களை
    இக்கு அரை யந்திரத்து உள் பட்டது என்ன கரும்பை பிழியும் ஆலையில் அகப்பட்ட பொருளைப் போல
    இரு வினையுள் புக்கு இருவகை வினைகளுள் சிக்கி
    அரை மா நொடியும் தரியாது சிறிது நேரம் கூட நிற்காமல்
    உழல் புண் பிறப்பு ஆம் திரிவதற்கு இடமான இழிந்த பிறப்பாகிய
    எக்கரை நீக்கி மணல் மேட்டைத் தாண்ட வைத்து
    அந்த இரு விரசைக்கு பெரிய விரஜா நதிக்கு
    அக்கரை சேர்க்கும் அக்கரையில் உள்ள வைகுண்டத்தில் சேர்த்து விடும்
    Last edited by sridharv1946; 22-07-13, 11:52.
Working...
X