Announcement

Collapse
No announcement yet.

திருவேங்கடத்து அந்தாதி 2/100 எல்லோரும் ஏத்த&am

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவேங்கடத்து அந்தாதி 2/100 எல்லோரும் ஏத்த&am

    திருவேங்கடத்து அந்தாதி 2/100 எல்லோரும் ஏத்தும் மலை எது ?

    மாலைமதிக்குஞ்சியீசனும்போதனும்வாசவனும்
    நூலைமதிக்கும்முனிவரும்தேவரும்நோக்கியந்தி
    காலைமதிக்குள்வைத்தேத்தும்திருமலைகைம்மலையால்
    வேலைமதிக்கும்பெருமானுறைதிருவேங்கடமே



    பதவுரை : மாலை + மதி + குஞ்சி
    நூலை + மதிக்கும் (ஆராயும்)

    காலை + மதிக்குள் (அறிவில்)
    வேலை + மதிக்கும் (கடையும்)

    மாலை மதிக் குஞ்சி ஈசனும் அந்தி நிலவைத் தரித்த முடி உடைய சிவனும் ,
    போதனும் வாசவனும் பிரமனும் , இந்திரனும் ,
    நூலை மதிக்கும் முனிவரும் சாத்திரங்களை ஆராயும் முனிவர்களும் ,
    அந்தி காலை மாலையிலும் காலையிலும்
    மதிக்குள் வைத்து ஏத்தும் அறிவில் வைத்து துதிக்கும்
    திருமலை சிறந்த மலை
    கைம் மலையால் மலை போன்ற கைகளால்
    வேலை மதிக்கும் பெருமான் பாற்கடலைக் கடைந்த திருமால்
    உறை திருவேங்கடமே இருக்கும் திரு வேங்கட மலையே !
    Last edited by sridharv1946; 22-07-13, 20:13.
Working...
X