Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 4/100 ஆரணம் போற்றும் &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 4/100 ஆரணம் போற்றும் &


    திரு வேங்கடத்து அந்தாதி 4/100
    ஆரணம் போற்றும் காரணன் நாரணனே !

    இருக்காரணஞ்சொல்லுமெப்பொருளின்பமுமெப்பொருட்குங்-
    கருக்காரணமுநற்றாயுநற்றந்தையுங்கஞ்சச்செல்வப்-
    பெருக்காரணங்கின்றலைவனுமாதிப்பெருந்தெய்வமு-
    மருக்காரணவும்பொழில்வடவேங்கடமாயவனே

    பதவுரை : இருக்கு + ஆரணம்
    கரு + காரணம்
    பெருக்கு + ஆரணங்கின்
    மரு + கார் + அணவும்



    இருக்கு ஆரணம் சொல்லும் ருக் முதலிய வேதங்கள் சொல்லும்
    எப்பொருள் இன்பமும் எல்லா பொருட்களும் , எல்லா ஆன்ந்தங்களும் ,
    எப்பொருட்கும் கருக்காரணமும் எல்லாப் பொருட்களுக்கும் மூல காரணமும் ,
    நல் தாயும் பிரியமுடைய நல்ல தாயும் ,
    நல தந்தையும் ஹிதம் விரும்பும் நல்ல தந்தையும் ,

    கஞ்சச்செல்வப் பெருக்கு தாமரையில் இருப்பவளும் , ஐஸ்வர்யம் நிரம்பியவளுமான
    ஆரணங்கின் தலைவனும் மகா லக்ஷ்மியின் கணவனும் ,
    ஆதிப் பெரும் தெய்வமும் முதன்மையான பெருமை உடைய தெய்வமும் ,
    மறு கார் அணவும் பொழில் மணமுள்ளதும் , மேகம் தழுவுவதுமான சோலைகளுடைய
    வடவேங்கட மாயவனே வடக்கே உள்ள வேங்கடமலையில் இருக்கும் திருமாலே !

    Last edited by sridharv1946; 23-07-13, 13:03.
Working...
X