திரு வேங்கடத்து அந்தாதி 6/100 தூயவனைத் துதித்தோம் தூர இரும் பிணிகாள் !
தூரவிரும்புண்டரிக்குமிக்காயத்தைச்சூழ்பிணிகா-
ணேரவிரும்புண்டரர்க்கருள்வானெடுவேங்கடத்தா-
னீரவிரும்புண்டரீகப்பொற்பாதங்களென்னுயிரைத்-
தீரவிரும்புண்டநீராக்குமாறுள்ளஞ்சேர்ந்தனவே
பதவுரை : தூர + இரும் + புண் + தரிக்கும்
நேர் + அவிரும் + புண்டரர்க்கு
ஈர + இரும் + புண்டரீக
தீர + இரும்பு + உண்ட
நேர் அவிரும் புண்டரர்க்கு நேர்மையான திருமண் காப்பு உடையவர்க்கு
அருள்வான் நெடு வேங்கடத்தான் அருள்கின்ற ஸ்ரீ வேங்கடவன்
ஈர இரும் புண்டரீக குளிர்ந்த பெரிய தாமரை போன்ற
பொற்பாதங்கள் தங்கம் போன்ற திருவடிகள்
என் உயிரை எனது உயிரை
தீர முழுவதும்
இரும்பு உண்ட நீர் ஆக்குமாறு இரும்பு உட்கொண்ட நீர் ஆவி ஆவது போல்
உள்ளம் சேர்ந்தன என் மனத்தில் சேர்ந்து விட்டன.
புண் தரிக்கும்இக்காயத்தை புண் ஏற்படும் இந்த உடலை
சூழ பிணிகாள் சூழ்ந்துள்ள நோய்களே !
தூர இரும் விலகிச் செல்லுங்கள் !
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks