Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 17/100 அனந்த சயனனை வணங

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 17/100 அனந்த சயனனை வணங

    திரு வேங்கடத்து அந்தாதி 17/100 அனந்த சயனனை வணங்க அனந்தல் அழித்து அணுகுங்கள் !

    இருப்பதனந்தனிலெண்ணலில்வைகுந்தத்தென்பர்வெள்ளிப்-
    பருப்பதனந்தண்மலரோனறிகிலர்பாரளந்த
    திருப்பதனந்தன்மதலைநிற்குந்திருவேங்கடமென்
    பொருப்பதனந்தறவிர்ந்துயிர்காடொழப்போதுமினே




    பதவுரை : இருப்பது + அனந்தனில்
    பருப்பதன் + அம் + தண்
    திரு + பதன் + நந்தன்
    பொருப்பு + அது + அனந்தல்

    உயிர்காள் உயிர் உள்ளவர்களே !
    இருப்பது எம்பெருமான் ஆட்சி செய்வது
    எண்ணல் இல் வைகுந்தத்து நினைக்க முடியாத ஸ்ரீ வைகுண்டத்தில்
    அனந்தனில் என்பர் ஆதி சேஷன் மீது என்று கூறுவர்
    வெள்ளி பருப்பதன் கைலாசத்தில் உள்ள சிவனும் ,
    அம் தண் மலரோன் அழகிய குளிர்ந்த தாமரையில் உள்ள பிரமனும்
    அறிகிலர் அறிய முடியவில்லை .
    பார் அளந்த திருப் பதன் உலகை அளந்த திருவடிகள் உடையவனும் ,
    நந்தன் மதலை நந்தகோபன் குமரனும் ஆன திருமால்
    நிற்கும் நின்ற கோலத்தில் அருளும்
    திருவேங்கடம் என் பொருப்பு திரு வேங்கடம் என்னும் மலையை
    அனந்தல் தவிர்த்து சோம்பல் ஒழித்து
    தொழப் போதுமின் வணங்க வாருங்கள்



    Last edited by sridharv1946; 27-07-13, 20:42.
Working...
X