Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 39/100 வேங்கடவன் பெயர&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 39/100 வேங்கடவன் பெயர&

    திரு வேங்கடத்து அந்தாதி 39/100 வேங்கடவன் பெயரை விடாமல் சொல்லுங்கள் !



    வடமலையப்பன்னகஞ்சேர்ந்தவனிடைமங்கைகொங்கை

    வடமலையப்பன்னரும்போகந்துய்த்தவன்மாயன்கண்ணன்
    வடமலையப்பன்னருள்போற்றியைவர்மயக்குகர-
    வடமலையப்பன்னிருநாமநாவின்மலக்குவனே

    பதவுரை : வடம் + அலை + அப் பன்னகம் (ஆலிலை )
    வடம் + அலைய + பன் + அரும் (மாலைகள் அசைய )
    வட + மலை + அப்பன் + அருள் (வேங்கட மலை )
    கரவடம் + அலைய + பன்னிரு (வஞ்சனை ஒழிய )

    வடம் ஆலிலையிலும்
    அலை அப்பன்னகம் சேர்ந்தவன் பாற்கடலில் ஆதி சேஷன் மேலும் துயின்றவனும்
    இடை மங்கை இடையப் பெண்ணான நப்பின்னையினுடைய
    கொங்கை வடம் அலைய தனங்களில் அணிந்த மாலைகள் அசையும்படி
    பன் அரும் போகம் துய்த்தவன் சொல்ல முடியாத இன்பம் அனுபவித்தவனும்
    மாயன் கண்ணன் அற்புத சக்தி உள்ளவனும் கிருஷ்ணனும் ஆன
    வட மலை அப்பன் திருவேங்கடமுடையானுடைய
    அருள் போற்றி திருவருளை துதித்து
    ஐவர் மயக்கும் பஞ்சேந்திரியங்கள் மனதை மயங்கச் செய்யும்
    கரவடம் அலைய வஞ்சனை ஒழியுமாறு
    பன்னிரு நாமம் பன்னிரண்டு திருப் பெயர்களை
    நாவின் மலக்குவன் நாவினால் விடாமல் சொல்வேன் !


    Last edited by sridharv1946; 03-08-13, 21:15.
Working...
X