Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 41/100 வேங்கடவா ! நீ ஆதī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 41/100 வேங்கடவா ! நீ ஆதī

    திரு வேங்கடத்து அந்தாதி 41/100 வேங்கடவா ! நீ ஆதரிக்காமல் நான் தரிக்க முடியாது !

    கருத்தாதரிக்குமடியேனைத்தள்ளக்கருதிக்கொலொ
    திருத்தாதரிக்குமைவர்க்கிரையாக்கினை- செண்பகத்தின்
    மருத்தாதரிக்குமருவியறாவடவேங்கடத்துள்
    ஒருத்தாதரிக்கும்படியெங்ஙனேயினிஉன்னைவிட்டே



    பதவுரை : கருத்து + ஆதரிக்கும்
    திருத்தாது + அரிக்கும் (கெடுக்கும் )
    மரு + தாது + அரிக்கும் (அரித்து )
    ஒருத்தா + தரிக்கும்படி

    செண்பகத்தின் மரு தாது சண்பக மலரின் மகரந்தப் பொடிகளை
    அரிக்கும் அருவி அரித்துக் கொண்டு வரும் அருவி
    அறா வடவேங்கடத்துள் இடைவிடாது ஓடும் வேங்கட மலையில் இருக்கும்
    ஒருத்தா ஒப்பற்ற கடவுளே !
    கருத்து ஆதரிக்கும் அடியேனை மனதில் உன்னையே விரும்புகிற தாசனான என்னை
    தள்ளக் கருதிக் கொலோ தள்ளி விட நினைத்தோ
    திருத்தாது சீர் திருத்தாமல்
    அரிக்கும் ஐவர்க்கு கெடுக்கும் பஞ்சேந்திரியங்களுக்கு
    இரை ஆக்கினை உணவு ஆக்கிவிட்டாய் ?
    இனி உன்னை விட்டு இனி மேல் நீ இல்லாமல்
    தரிக்கும் படி என்னே வாழும் வழி என்ன ?
    Last edited by sridharv1946; 04-08-13, 12:18.
Working...
X