Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 43/100 வாழுகைக்கு வேங

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 43/100 வாழுகைக்கு வேங

    திரு வேங்கடத்து அந்தாதி 43/100 வாழுகைக்கு வேங்கடவனை வாழ்த்துமின் !

    இல்லைக்கண்டீரின்பந்துன்பங்கண்டீர்கண்டவேந்திழையார்
    சொல்லைக்கண்டீரமுதென்னுந்தொண்டீர் தொல்லசுரனிறங்-
    கல்லைக்கண்டீரவத்தைத் திருவேங்கடக்காவலனை
    மல்லைக்கண்டீர் தரத்தேய்த்தானை வாழ்த்துமின்வாழுகைக்கே

    பதவுரை :இல்லை + கண்டீர்
    சொல்லை + கண்டீர்
    கல் + ஐ + கண்டீவரத்தை
    மல்லை + கண் + தீர


    கண்ட ஏந்து இழையார் சொல்லை பார்த்த நகை பூண்ட பெண்களுடைய சொற்களை

    கண்டு ஈர் அமுது என்னும் கற்கண்டு என்றும் குளிர்ந்த அமிர்தம் என்றும் சொல்லி
    தொண்டீர் அவர்களுக்கு அடிமை ஆனவர்களே !
    இன்பம் இல்லை கண்டீர் அதில் இன்பம் இல்லை என்றும்
    துன்பம் கண்டீர் துன்பமே உண்டு என்றும் அறியுங்கள் !
    வாழுகைக்கு நீங்கள் இன்ப வாழ்வு பெற

    தொல் அசுரன் நிறம் பழமையான ஹிரண்யாசுரனுடைய மார்பை
    கல் ஐ கண்டீவரத்தை கிழித்த அழகிய சிங்கமாவனும்
    மல்லை கண் தீர் தர தேய்த்தானை மல்லர்களை கண் கெடும்படி அழித்தவனுமான
    திருவேங்கடக்காவலனை திரு வேங்கடமுடையானை
    வாழ்த்துமின் வணங்குங்கள் !
    Last edited by sridharv1946; 04-08-13, 21:14.
Working...
X