Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 44/100 வேங்கடவனைக் கண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 44/100 வேங்கடவனைக் கண

    திரு வேங்கடத்து அந்தாதி 44/100 வேங்கடவனைக் கண்டு விரோதிகள் ஓடுவர் !



    கைத்தனுமோடிசைவெற்பெனக்காணவெவ்வாணனென்னு-
    மத்தனுமோடிகல்செய்வனென்றேவந்துவையுறுவே-
    லத்தனுமோடியுமகியுமோடவென்னப்பனுக்குப்-
    பித்தனுமோடினனங்கத்துத்தானென்றும்பெண்ணனென்றே

    பதவுரை : கை + தனு + மோடி
    மத்தன் + நுமோடு
    அத்தனும் + மோடியும்
    பித்தனும் + ஓடி



    கை தனு கையில் உள்ள வில்
    மோடு இசை வெற்பு எனக் காண உயர்ந்த மலை போலத் தோன்ற
    வெவ்வாணன் என்னும் மத்தன் கொடிய வாணாசுரன் எனும் உன்மத்தன்
    நுமோடு இகல் செய்வன் என்றே உம்முடன் போர் செய்வேன் என்று வந்தபோது
    என் அப்பனுக்கு திரு வேங்கடமுடையான் ஆன உமக்கு முன்
    உறுவேல் அத்தனும் கூரிய வேல் கொண்ட முருகனும் ,
    மோடியும் அங்கியும் ஓட துர்கையும் , அக்கினியும் தோற்று ஓட
    பித்தனும் பித்தன் ஆகிய சிவனும்
    அங்கத்து
    என்றும் தன் உடலில்என்றும்
    தான் பெண்ணன் என்று ஓடினன் தான் பெண்ணை உடையவன் என்று கூறி ஓடினான்
    Last edited by sridharv1946; 05-08-13, 19:17.
Working...
X