Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 59/100 தீங்கு அற திருவ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 59/100 தீங்கு அற திருவ

    திரு வேங்கடத்து அந்தாதி 59/100 தீங்கு அற திருவேங்கடத்தான் பெயர் சொல்லும் !

    மசகந்தரமென்னலாய் நிலையாவுடல்வாழுயிரை
    யசகந்தரவல்லதோ ? அன்னைமீர் ! அண்டமுண்டுமிழ்வா-
    ரிசகந்தரவண்ணர் வேங்கடவாணரிலங்கையர்கோன்
    தெசகந்தரமறுத்தார் திருப்பேர் சொல்லும் தீங்கறவே



    பதவுரை : மசகம் + தரம்
    அசகம் + தர
    வாரிச + கந்தர (தாமரை மேகம்)
    தெச + கந்தரம் (பத்து கழுத்து)

    அன்னைமீர் தாய்மார்களே
    மசகம் தரம் என்னல் ஆய் கொசுவுக்குச் சமம் என்று சொல்லத்தக்க
    நிலையாஉடல் வாழ் உயிரை நிலையில்லாத உடலில் வாழும் உயிரை
    அசகம் தர வல்லதோ ஆட்டின் தலை
    பலி கொடுப்பதால் தர முடியுமா ?
    அண்டம் உண்டு உமிழ் அண்ட கோளங்களை விழுங்கி பின் வெளிப்படுத்தியவரும்
    வாரிச கந்தர வண்ணனார் தாமரை பூத்தமேகம் போல் வடிவம் உள்ளவரும்
    இலங்கையர் கோன் இலங்கை மன்னன் ராவணனுடைய
    தெச கந்தரம் அறுத்தார் பத்து தலைகளை வெட்டியவருமான
    வேங்கடவாணர் திருப்பேர் திரு வேங்கடத்தில் இருப்பவனுடைய பெயர்களை
    தீங்கு அறவே சொல்லும் துன்பம் நீங்குவதற்காக சொல்லுங்கள்
    Last edited by sridharv1946; 15-08-13, 18:41.
Working...
X