Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 64/100 உலகம் உண்டாவதற&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 64/100 உலகம் உண்டாவதற&

    திரு வேங்கடத்து அந்தாதி 64/100 உலகம் உண்டாவதற்கு உன் உந்தித்தாமரையே காரணம் !

    உலகந்தரவுந்திபூத்திலையேற் சுடரோரிரண்டு-
    மிலகந்தரமும்புவியுமெங்கே யயனீசனெங்கே
    பலகந்தர முமுணவுமெங்கேபல்லுயிர்களெங்கே
    திலகந்தரணிக்கெனனின்றவேங்கடச்சீதரனே



    பதவுரை :உலகம் + தர
    இலகு + அந்தரமும்
    பல + காந்தரமும்
    திலகம் +தரணி

    தரணிக்குத் திலகம் என நின்ற பூமிக்குத் திலகம் போல் அழகு செய்யும்
    வேங்கடச் சீதரனே திரு வேங்கட மலையில் இருக்கும் திருமாலே !
    உலகம் தர உலகங்களைப் படைப்பதற்காக
    உந்தி பூத்திலையேல்
    உன் நாபியில் தாமரை மலர வில்லையென்றால்
    சுடர் ஓர் இரண்டும் சூரிய சந்திரர்களாகிய இரு சுடர்களும்
    இலகு அந்தரமும் அவை விளங்கும் இடமான ஆகாயமும்
    புவியும் எங்கே பூமியும் எவ்விடத்தில் தோன்றும் ?
    அயன் ஈசன் எங்கே பிரமனும் சிவனும் எவ்விடத்தில் தோன்றுவர் ?
    பல கந்தரமும் உணவும் எங்கே பல மேகங்களும் உணவுகளும் எவ்விடத்தில் தோன்றும் ?
    பல உயிர்கள் எங்கே பலவகை உயிர்களும் எவ்விடத்தில் தோன்றும் ?
    Last edited by sridharv1946; 16-08-13, 20:18.
Working...
X