Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 72/100 வெண்ணெய் உண்ட வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 72/100 வெண்ணெய் உண்ட வ

    திரு வேங்கடத்து அந்தாதி 72/100 வெண்ணெய் உண்ட வேங்கடவனைச் சேர்வது எப்போது ?



    தாமத்தளைவெண்ணெயுண்டவன்னாளிடைத்தாயார்பிணி-
    தாமத்தளையுவந்தார் வேங்கடாதிபர் தாமரைப்பூந்-
    தாமத்தளைமணியோடணிமார்பினற்றண்ணந்துழாய்த்-
    தாமத்தளைவதென்றோ மடவீரென்றடமுலையே


    பத
    வுரை : தாம் + மத்து + அளை
    தாமம் + தளை
    தாமத்தளை
    தாமத்து + அளைவது


    மடவீர் மடமை உ
    டையவர்களே !
    மத்து அளை வெண்ணெய் உண்ட மத்தால் கடையப்டும் வெண்ணெயை உண்ட
    அந்நாள் இடைத்தாயார் அந்த நாளில், வளர்த்த தாயான யசோதா
    பிணி
    தாமத் தளை உவந்தார் கட்டின கயிற்றுக் கட்டை விரும்பிய
    வேங்கடாதிபர் திரு வேங்கடமுடையான்
    தாமரைப் பூந்தாமத்தளை தாமரை மலரில் இருக்கும் திருமகளையும்
    மணி மார்பில் கௌஸ்துபம் எனும் மணியையும் அணிந்த மார்பில் உள்ள
    நல தண் அம் துழாய் தாமத்து சிறந்த குளிர்ந்த அழகிய துளசி மாலையில்
    என் தட முலை அளைவது என்றோ என் பெரிய தனங்கள் சேர்வது எப்பொழுது ?
    Last edited by sridharv1946; 19-08-13, 21:13.
Working...
X